மேலும் அறிய

ராஜினாமா செய்த முன்னாள் மேயர் இந்திராணி பெயரை மேம்பாலத்திற்கு சூட்டுங்க.. வஞ்சபுகழ்ச்சியுடன் புதுமனு !

வரி முறைகேடு விவகாரத்தில முன்னாள் மேயரின் மீது எந்த குற்றமும் இல்லையென்றால் பாலத்திற்கு பெயர் சூட்டவும், இல்லையெனில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பேட்டி.

வரிமுறைகேடு விவகாரம் - மேயரை விசாரணைக்கு உட்படுத்தாமல் அரசு அலட்சியம் -  பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மேயர் இந்திராணி பெயரை கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு சூட்டக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்த சமூக ஆர்வலர்.

மதுரை மாநகராட்சி விவகாரம்

மதுரையில் 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையில் உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகள் குழு நியமித்தது. வரி முறைகேடு தொடர்பாக முதல் குற்றவாளியாக மாநகராட்சி மேயர் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் ஜாமினில் உள்ளனர்.

குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு

அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி வரி வசூல் குறைப்பு செய்யப்பட்டது, விசாரணையில் தெரிய வந்தது. வரி முறைகேடு விவகாரத்தில்  மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மேயர் இந்திராணி தனது பதவியை குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்ததை அடுத்து துணை மேயர் நாகராஜன் பொறுப்பு மேயராக பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் முறைகேடு விவகாரம் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் முன்னாள் மேயர் முத்துவின் பெயரை மேம்பாலத்திற்கு வைத்தது போல மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு முன்னாள் மேயர் இந்திராணியின் பெயரை சூட்டக் கோரி, மதுரை செல்லூரை சேர்ந்த மனுநீதி மக்கள் நல இயக்க தலைவர் சங்கர பாண்டியன் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும்

இது குறித்து பேசிய சங்கரபாண்டியன் மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடுவிவகாரத்தில் மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார். எனவே அவர் மீது புகார் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்று குற்றச்சாட்டிற்கு பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்ததை பாராட்டி மேம்பாலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தார். மதுரையில் முன்னாள் மேயர் இந்திராணியின் பெயரை கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என வஞ்சபுகழ்ச்சியுடன் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget