![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மதுரை: முன் விரோதத்தால் நடந்த கொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
![மதுரை: முன் விரோதத்தால் நடந்த கொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு Madurai High Court orders to close case seeking cancellation of tender for pudukottai road and madurai praveen kumar murder case மதுரை: முன் விரோதத்தால் நடந்த கொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/03/e8305990344ebdbdea1e0c0e25d9be63_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இதே பகுதியைச் சேர்ந்தவர் சைக்கோ கண்ணன் (24). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் அதே ஆண்டில் அங்குள்ள கோவிலில் பிரவீன் குமார் இருந்தார். அங்கு சென்ற சைக்கோ கண்ணன், தனது நண்பர்கள் அட்டோரி ராஜவேலு, பாலகணேஷ், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து 4 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)