மேலும் அறிய

மதுரை: முன் விரோதத்தால் நடந்த கொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

 
கடந்த 2018 ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பிரவீன் குமாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இதே பகுதியைச் சேர்ந்தவர் சைக்கோ கண்ணன் (24). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் அதே ஆண்டில் அங்குள்ள கோவிலில் பிரவீன் குமார் இருந்தார். அங்கு சென்ற சைக்கோ கண்ணன், தனது நண்பர்கள் அட்டோரி ராஜவேலு, பாலகணேஷ், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து 4 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி தீர்ப்பளித்தார்.

 

மற்றொரு வழக்கு
 
புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
 
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த தன விமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிளக்கின் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் வரைவோலையாக எடுத்து விண்ணப்பித்தேன். ஆனால், தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது.
 
இந்நிலையில் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்த நெம்மக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் 20% கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டரை அவருக்காக ஒதுக்கவிருப்பதாக தெரியவருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட ஐந்து சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ1.48 கோடி மதிப்பிலான புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget