மேலும் அறிய

மதுரை: முன் விரோதத்தால் நடந்த கொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

 
கடந்த 2018 ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பிரவீன் குமாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இதே பகுதியைச் சேர்ந்தவர் சைக்கோ கண்ணன் (24). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் அதே ஆண்டில் அங்குள்ள கோவிலில் பிரவீன் குமார் இருந்தார். அங்கு சென்ற சைக்கோ கண்ணன், தனது நண்பர்கள் அட்டோரி ராஜவேலு, பாலகணேஷ், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து 4 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி தீர்ப்பளித்தார்.

 

மற்றொரு வழக்கு
 
புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
 
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த தன விமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிளக்கின் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் வரைவோலையாக எடுத்து விண்ணப்பித்தேன். ஆனால், தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது.
 
இந்நிலையில் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்த நெம்மக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் 20% கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டரை அவருக்காக ஒதுக்கவிருப்பதாக தெரியவருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட ஐந்து சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ1.48 கோடி மதிப்பிலான புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget