மேலும் அறிய

Madurai Hc: சுங்கத்துறை அதிகாரிகள் 3 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக பறிமுதல் செய்ததை திரும்ப ஒப்படைக்க கோரி மனு

இலங்கை தங்க வியாபாரியை  தாக்கி மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 கிலோ 200 கிராம் தங்க நகையை சட்ட விரோதமாக பறிமுதல் செய்ததை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.

இலங்கையை சேர்ந்த ஷாஜகான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தற்காலிக சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள நான், இலங்கையின் மாதளை மாவட்டத்தில் குடியிருந்து வருகிறேன். துபாயின் தங்க சந்தையில் மொத்த விலையில் தங்கம் கொள்முதல் செய்து இலங்கையில் உள்ள நகைக்கடைகளுக்கு சில்லறையில் விற்பனை செய்து வருகிறேன். இதற்காக வழக்கமாக துபாயில் இருந்து தங்கம்  மற்றும் வெள்ளி கட்டிகளை  சுங்கவரி செலுத்தி உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் கொண்டு சென்று இலங்கை நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அங்குள்ள நகைக்கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறேன். 
 
இதற்கிடையே, கடந்த மாதம் 15-ந் தேதி துபாயில் இருந்து 2 கிலோ தங்கம் வாங்கிக்கொண்டு பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் சுங்கக்கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் தனியார் விமானத்தில் இலங்கை சென்று கொண்டிருந்தேன். எனது விமானத்தில் இருந்து கொழும்பு செல்வதற்கான இணைப்பு விமானம் மதுரையில் இருந்து புறப்படுவதால், கடந்த மாதம் 16-ந் தேதி மதுரை விமான நிலையம் வந்திருந்தேன். விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை உணவு மற்றும் பிற வசதிகளை பெற பயணிகளுக்கான காத்திருப்பு அறையில் இருந்தேன். அப்போது என்னுடன் எனது நண்பரும் ஒரு கிலோ 200 கிராம் தங்கத்துடன் உரிய ஆவணங்களுடன் அமர்ந்து இருந்தோம்.
 
அப்போது, மதுரையில் உள்ள சுங்கத்துறை துணை கமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாக கூறி 2 நபர்கள் தங்கம் குறித்து என்னிடம் விசாரணை நடத்தினர். ஆனால், துபாயில் இருந்து இலங்கை செல்வதற்காக வந்திருப்பதாகவும், இந்தியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, என்னிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தும் வலுக்கட்டாயமாக சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு வருமாறு அழைத்து சென்றனர். அப்போது என்னிடம் இருந்த 2 கிலோ தங்கத்துக்கான உரிய ஆவணங்களை அவர்களிடம் காண்பித்தேன். எதிர்பாராதவிதமாக திடீரென்று அவர்கள் 2 பேரும் என்னிடம் இருந்த தங்கத்தை பறித்துக்கொண்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்து சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. பின்னர் என்னையும், என்னுடன் வந்திருந்த நண்பரையும் அங்குள்ள  கழிப்பறைக்கு அழைத்து சென்று அவரிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் தங்கத்தை பறித்துக்கொண்டதுடன் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.  எங்களிடம் இருந்த செல்போனை பறித்து அதிலிருந்த சிம் கார்டை வெளியில் எடுத்து, செல்போனை ரீ செட் (அனைத்து பதிவுகளையும் அழித்து) செய்து விட்டனர். அதேபோல, எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ 200 கிராம் தங்கத்துக்கான பறிமுதல் ஆவணம் தரவில்லை. அதற்கு பதிலாக 3 வெற்று தாள்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி கொண்டனர். 
 
அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை பெறுவதற்காக கடந்த மாதம் 24-ந் தேதி மதுரை வந்து சென்னையில் உள்ள தலைமை சுங்கத்துறை கமிஷனர், விமானப்போக்குவரத்து இணை இயக்குனர், திருச்சி சுங்கத்துறை கமிஷனர், மதுரை சுங்கத்துறை துணை கமிஷனர் மற்றும் மதுரை விமான நிலைய இயக்குனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். இதற்கிடையே, இங்குள்ள நாளிதழ்களில் ஒரு கிலோ 924 கிராம் தங்கம் விமான நிலைய கழிப்பறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருப்பதும் தெரியவந்தது. இது முற்றிலும் பொய்யான தகவல். எனவே, கடந்த மாதம் 16-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான மதுரை விமானநிலையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை அழித்துவிடாமல் பாதுகாக்கவும், எங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 3 கிலோ 200 கிராம் தங்கத்தை ஒப்படைக்கவும், சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொண்ட மதுரை சுங்கத்துறை துணை கமிஷனர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் .
என மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில்  மதுரை விமானநிலையத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் வழக்கு குறித்து தலைமை சுங்க துறை ஆணையர்  மற்றும் மதுரை விமான நிலைய மேலாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget