மேலும் அறிய

பண மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை - மதுரை உயர்நீதிமன்றம்

தண்டனை விதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் தற்போது நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

*நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்  முத்துகிருஷ்ணனுக்கு வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு*
 
*வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முத்து கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவர் செலுத்த வேண்டிய 43  லட்சத்தை வட்டியுடன் செலுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது*
 
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் தவமணி ஸ்டீபன் ஜெயராஜ். சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வருகிறார். தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் கிடைத்த தொகையை கொண்டு சொந்த ஊரில் நிலம் வாங்க முடிவு செய்தார். இதற்காக தனது பள்ளி நண்பர் முத்துகிருஷ்ணன் அணுகினார். அவர் பெயரில் நிலம் வாங்குவதற்கு முத்துகிருஷ்ணன் சம்மதித்தார். இதையடுத்து சிறுக சிறுக முத்துகிருஷ்ணன் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினார். ஆனால் அவர் அந்த தொகையை எடுத்து தவமணி பெயரில் நிலம் வாங்காமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பணம் சம்பாதித்தார்.
 
இந்த தகவல் தெரிந்தவுடன் தனது 1 கோடியே 25 லட்சம் ரூபாயை  திருப்பித் தருமாறு முத்துகிருஷ்ணனிடம் தவமணி கேட்டார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக புகார்கள் எழுப்பப்பட்டன. பின்னர் 75 லட்ச ரூபாய்க்கு தங்களின் நிலத்தை தவமணி ஸ்டீபன் ஜெயராஜுகு பதிவு செய்து கொடுத்தனர். மீதமுள்ள  43 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அந்த காசோலை முத்துகிருஷ்ணன் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பாக 2013- ல் வள்ளியூர்  மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  முத்து கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவர் செலுத்த வேண்டிய 43  லட்சத்தை வட்டியுடன் செலுத்துமாறும் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முத்து கிருஷ்ணன்  மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்து வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை உறுதி செய்யக் கோரி தவமணி ஸ்டீபன் ஜெயராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், முத்து கிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தண்டனையை உறுதி செய்தும், 43 லட்சத்தை வட்டியுடன் செலுத்துமாறும் உத்தரவிட்டார். முத்துகிருஷ்ணன் தற்போது நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget