மேலும் அறிய

83 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுசெய்த மதுரையின் பாதுகாவலன் - அப்துல்கலாம் வழியில் அசத்தல் பயணம்

மரங்களின் பழங்களை சாப்பிடும் பறவைகள் கூட இன்னும் 10 மரங்களை உருவாக்கும் என்பதால் இந்த வகையான மரங்களை நட்டு வைப்பதாக தெரிவித்தார்.

83 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுசெய்த மதுரையின் பாதுகாவலன். - அப்துல்கலாம் வழியில் ஒரு கோடி மரங்களை நட்டு அடுத்த தலைமுறைக்கு மதுரையை பசுமை பூங்காவாக மாற்ற முயற்சி.

அப்துல்கலாம் வழியில் பயணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கட்டிட பொறியாளர் குபேந்திரன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக மதுரையில் பள்ளிகள், தேசிய நெடுஞ்சாலை, சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார். இவர் குறித்து களஆய்வு செய்ததில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வழியில் இந்தியாவை பசுமை பூங்காவாக மாற்ற செய்ய வேண்டும். அதையும் வருங்கால இளைய தலைமுறைக்கு உதவும் வகையில் இந்தியாவை தூய்மையான சுற்றுசூழல் நிறைந்த இந்தியாவாக மாற்ற ஒவ்வொருவரும் 15 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என பேசினார். அப்துல்கலாம் கூறிய வழியில் இன்றைக்கும்  பலரும் மரங்களை நட்டு வருகின்றனர். மறைந்த நடிகரின் விவேக் அவரைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என தமிழக முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். ஆனால், தனி ஒரு நபராக தனது முயற்சியில் இதுவரை 83 ஆயிரம் மரக்கன்றுகளை அரசுப் பள்ளி முதல் மதுரையின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், சுபநிகழ்ச்சிகள் வரை இலவசமாக நடவு செய்து அதனை வாரத்திற்கு இருமுறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். 

சிலப்பதிகார காலத்து மரங்கள்

இவர் சின்னச் சின்ன மரக்கன்றுகளை நட்டு வைக்காமல் பயனுள்ள 7 முதல் 10 அடி உயரம் அளவு கொண்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார். சிறு சிறு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஆடுகள், மாடுகள், சேதப்படுத்தும் என்பதால் அவற்றை நடுவதை தவிர்த்திருப்பதாகவும் மேலும், "நீரின்றி அமையாது உலகு" என்ற வரிகளுக்கு ஏற்ப நீரின்றி வாழாது உயிர்". என மாறிய நிலையில், மரங்களும் ஒரு உயிர் என்பதால் நடவு செய்வது மட்டுமல்லாமல் அதனை பராமரிக்க 4.5 லட்சம் செலவில் பழைய தண்ணீர் லாரி ஒன்றை வாங்கி வாரத்திற்கு இருமுறை தண்ணீர் விட்டு குழந்தை போல பராமரித்து வருகிறார். நமது மண்ணிற்கு ஏற்ற வகையில் நாட்டு வகையை சேர்ந்த புங்கை, பூவரசு, அவிலம், வேம்பு, ஆலம், வாகை, இலுப்பை, மருத மரம், ஐந்திலை பாலை, ஏழிலைப்பாலை என சிலப்பதிகார காலத்தில் உள்ள மரங்களை கூட நட்டு வைப்பதாகவும், பறவைகளுக்காக மா, நாவல், இலந்தை உள்ளிட்ட மர வகைகளும் நட்டு வைப்பதாக தெரிவித்தார். அந்த மரங்களின் பழங்களை சாப்பிடும் பறவைகள் கூட இன்னும் 10 மரங்களை உருவாக்கும் என்பதால் இந்த வகையான மரங்களை நட்டு வைப்பதாக தெரிவித்தார்.

10க்கு 100 மரக்கன்று

இந்த ஆண்டிற்குள் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான மரக்கன்றுகளை வாங்கி வந்து வளர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தனது சொந்த பணத்தில் வளரும் இளம் தலைமுறை நிற்கும் வருங்கால சந்ததியினருக்கும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பசுமை பூங்காவாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், ’சாலை விரிவாக்க பணி என்பது அத்தியாவசியம் ஆனால் இயற்கையை அழிக்காத சாலை விரிவாக்க பணியாக இருக்க வேண்டும்’ நீதிமன்ற உத்தரவின் படி, 10 மரக்கன்றுகள் அல்ல 100 மரக்கன்றுகளை கூட தான் நட தயாராக இருப்பதாகவும் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

- அம்மாடியோவ்..மதுரையில் மட்டும் 3 ஆண்டுகளில் 19,784 போதை மாத்திரைகள் பறிமுதல்; காவல் ஆணையர் அதிர்ச்சித் தகவல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget