மதுரையில் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்.. அடுக்கடுக்கான சுழற் கேடயங்கள், யார் இந்த பிரசன்னா !
மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளராக பணியாற்றியுள்ளார்.

மதுரை கோட்டத்தில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், சென்னை கோட்டத்தில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி, தெற்கு ரயில்வேயில் இணை முதன்மை ரயில் போக்குவரத்து மேலாளராகவும் பணியாற்றியவர்.
புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்
மதுரை கோட்டத்தில் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 1) அன்று பதவியேற்றுள்ளார். தற்போதைய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். என். ராவ் செவ்வாய்க்கிழமை அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வி. பிரசன்னா புதிய கூடுதல் கோட்ட ட்ட ரயில்வே மேலாளராக பதவி ஏற்றுள்ளார்.
முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளர் பணி
பிரசன்னா இதற்கு முன்பு தென்கிழக்கு ரயில்வேயில் முதன்மை சரக்கு போக்குவரத்து மற்றும் இழப்பீடு துறை வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பிரிவை சேர்ந்தவர். இவர் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இளங்கலை மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளராக பணியாற்றியுள்ளார்.
சிறப்பாக பணியாற்றி ஐந்து திறன் சுழற் கேடயங்களை பெற்றவர்.
மேலும் மதுரை கோட்டத்தில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், சென்னை கோட்டத்தில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி, தெற்கு ரயில்வேயில் இணை முதன்மை ரயில் போக்குவரத்து மேலாளராகவும் பணியாற்றியவர். இவர் இந்த பதவிகளில் சிறப்பாக பணியாற்றி ஐந்து திறன் சுழற் கேடயங்களை பெற்றவர்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















