மேலும் அறிய
பைக் , வீடு மற்றும் சேப்டி லாக்கர் ஆகியவற்றின் சாவி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
பூட்டு சாவி தொழில் செய்யும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைக்க வேண்டும்.

சாவி தொழிலாளர்கள் நலச்சங்கம்
Source : whatsapp
கைத்தொழில் மூலம் தொலைந்து போன சாவி செய்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி லைசன்ஸ் கொடுக்க வேண்டும்.
பூட்டு சாவித் தொழில்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சாவி தொழிலாளர்கள் நலச்சங்கம் திறப்பு விழா நிகழ்வு சாவி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கௌசல் தலைமையில் தலைவர் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரையில் உள்ள சாலையோர சாவித் தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களை சாவித் தொழிலாளர் நலச் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சாதி தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் கௌசல் மற்றும் ஆனந்தன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது...," பூட்டு சாவித் தொழில் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் கையில் சாவி தொழில் செய்யும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். பூட்டு சாவி சாலையோர தொழிலாளர்களிடம் போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள். ஏராளமான சாலையோர பூட்டு சாவி தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் இணைந்து வருகிறார்கள்.
சாவித் தொழிலாளர்களுக்கு உரிய லைசென்ஸ் கொடுக்க வேண்டும்
சாவித் தொழிலாளர்கள் கைத்தொழிலாக இதை செய்கிறார்கள். இது ஆதி காலத்து கலையாகும், இது தற்போது அழிந்து கொண்டே வருகிறது. பூட்டு சாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நாங்கள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சாலையோர சாவித் தொழிலாளர்கள் பலரும் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போதைய தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம். சாவித் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இனிமேல் இந்த தொழிலை நாம் செய்ய வேண்டுமா நமக்கான மரியாதை இங்கு இல்லை என்று சாவி தொழிலாளர்கள் நினைக்கிறார்கள். மாநகராட்சியில் இருந்து சாவித் தொழிலாளர்களுக்கு உரிய லைசென்ஸ் கொடுக்க வேண்டும்.எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த மாதிரி இருக்கும்.
சாலையோர சாவி தொழிலாளர்களை எங்கள் சங்கத்தில் இணைத்து வருகிறோம்.
அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக சாவித் தொழிலை அரசு கொண்டுவர வேண்டும். சாவி போட வரும் வாடிக்கையாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தரமற்ற ஒரு பொருளை சாவியை நீங்கள் போடுவதால் வாகனங்கள் மற்றும் வீடு பூட்டு கருவிகளில் சிக்கல்கள் ஏற்படும். தமிழ்நாடு முழுவதும் 50,000 பூட்டு சாவி செய்யும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எங்களின் சங்க உறுப்பினர்களுக்கு இந்த தொழிலை சொல்லிக் கொடுத்து வருகிறோம். பெரும்பாலான சாலையோர சாவி தொழிலாளர்களை எங்கள் சங்கத்தில் இணைத்து வருகிறோம்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டின் சாவி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு?
கார் அல்லது பைக் வீட்டு சாவி தொலைந்து விட்டால் வாடிக்கையாளர்கள் வீட்டின் முன்பு நின்று ஒரு போட்டோவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க வேண்டும். வாகனமாக இருந்தால் வண்டியின் ஆர்சி புக் FC இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் வண்டிக்கான ஆவணங்களை வாங்கி டாக்குமெண்டேஷன் செய்து ஆவணங்களை சரிபார்த்துவிட்டு சாவி செய்து தருவோம். ஆதார் கார்டில் இருக்கும் ஓனரும் ஆர்சி புக் இருக்கும் ஓனரும் சரியாக இருக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால்தான் சாவி போட்டு கொடுக்க முடியும். அதேபோல் சாலையோர சாவி தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறோம். குறிப்பாக ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டும்தான் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு சாவி போட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
டிரேட் லைசென்ஸ் எங்களுக்கு வேண்டும்
பழைய வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் யாரும் ஆர்சி புக்கில் பெயரை மாற்ற மாட்டார்கள். வாகனத்தின் ஆர்சி புக் ஓனர் வந்தால் தான் சாவி போட்டு தருவோம் என்று சொல்ல முடியாது. யார் வருகிறார்களோ அவர்களின் ஐடி ப்ரூப் வாங்கிவிட்டு சாவி போட்டு தருகிறோம். சேப் லாக்கர் சாவி போட்டு ஓபன் செய்வதில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளோம். சேப் லாக்கர் எப்போது வாங்கப்பட்டது. ஆவணங்கள் சரியாக இருந்தால் தான் சேப் லாக்கர் சாவி போட்டு கொடுக்க வேண்டும் என்று அனைத்து தொழிலாளர்களுக்கும் வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் விஜயக்கு எங்களுடைய பெரிய கோரிக்கை என்னவென்றால் டிரேட் லைசென்ஸ் எங்களுக்கு வேண்டும் நாங்களும் தொழில் வரி கட்டி மாநகராட்சி சான்றிதழ் உடன் லைசன்ஸ் உடன் எங்கள் தொழிலை பாதுகாப்போடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம் எனவே இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















