மேலும் அறிய

மதுரையில் இரு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் !

ஒரு வாரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மகிழ்ச்சியுடன் இருந்த பிள்ளைக்கு விஷம் கொடுத்த தந்தையின் செயல் சோகத்தில் முடிந்தது.

மதுரையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கடிதம் எழுதிவைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை - போலீஸ் விசாரணை.

குடும்ப சண்டை

மதுரை மாநகர் முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (39) - காயத்ரி (29) தம்பதியினர் யுவஸ்ரீ -(10) கனிஷ்கா (5) என்ற இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். கோபிராஜ் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் (மீனாட்சிமிஷன் ) மருத்துவமனையில்  எலக்ட்ரெசியனாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருந்துவந்த நிலையில் கணவன் - மனைவியிடையே கடந்தவாரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காயத்ரியின் உறவினர்கள் கோபிராஜிடம் நேரில் வந்து பேசி சமாதானம் செய்துவைத்துள்ளனர்.
 
தூக்கிட்டு தற்கொலை

பின்னர் கோபிராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பத்தோடு இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி காயத்ரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கோபிராஜ் தனது இரு மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். நவம்பர் 30 ஆம் தேதி மூத்தமகள் யுவஸ்ரீக்கு பிறந்தநாள் என்பதால் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுள்ளதாக தனது தந்தையிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வரை தனது இரு பெண் பிள்ளைகளுடன் இருந்து வந்த நிலையில், பிள்ளைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இருவரும் மயங்கிய நிலையில் கழுத்தை ஒயரை வைத்து நெரித்து விட்டு, குழந்தைகள் உயிரிழந்தவுடன் கோபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
கண்ணீர் விட்டு அழுதனர்.

கோபிராஜ் பணிக்கு செல்லாத நிலையில் நீண்ட நேரம் வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில், பக்கத்து வீட்டார் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக பார்த்த போது, தந்தை மற்றும் இரு பிள்ளைகள் என மூவரும்  உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து கூடல்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்த இரண்டு பெண் குழந்தைகளும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நன்கு பழகி வந்தவர்கள். இதனால் இரு குழந்தைகள் இறந்த உடலைப் பார்த்து தெருவில் உள்ள அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது கோபிராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக இரண்டு பக்க கடிதம் எழுதிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பிறந்த நாள் கொண்டாடவிருந்த மகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget