மேலும் அறிய
தூய்மை நகராக மாறும் மதுரை... எழில்கூடல் எனும் சிறப்புத்திட்டம் அறிமுகம் 2000 பேர் பங்கேற்பு !
இந்த திட்டம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாபெரும் மக்கள் இயக்கமாக, மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளன.

அமைச்சர் பி.மூர்த்தி
Source : whats app
"எழில்கூடல்" எனும் சிறப்பு திட்டத்தின் முதல் நிகழ்வாக மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணியினை துவக்கி வைத்தார்.
எழில்கூடல் நிகழ்வு
மதுரை மாவட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை பி.மூர்த்தி, மாமதுரையை தூய்மையான நகரமாக்கிட "எழில்கூடல்" எனும் சிறப்பு திட்டத்தின் முதல் நிகழ்வாக அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் தூய்மை பணியினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதற்கட்டமாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சுற்றியுள்ள ஆவணி வீதி, மாசி வீதி மற்றும் ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணி செய்யவும், மேலும் இரவு முழுவதும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் தூய்மை செய்யப்பட்டு பின் அதே இடங்களில் தொட்டியில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கவும், அதேபோல் இந்த இடங்களில் குப்பைகளை அங்காங்கே கொட்டாத வண்ணம் குப்பை தொட்டிகளும் வைத்து இந்த தூய்மை பணியினை மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு விழிப்புணர்வு தூய்மை பணி செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
தூய்மை பணியை மேற்கொண்டார்கள்
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த மாபெரும் தூய்மை பணியினை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ள சன்னதி தெருவில் துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 42, 43, 47, 49, 50, 51, 52, 53, 54, 55, 76, 85 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட அம்மன் சன்னதி & சுவாமி சன்னதி, தெற்கு சித்திரை தெரு, மேற்கு சித்திரை தெரு, வடக்கு சித்திரை தெரு, கிழக்கு சித்திரை தெரு, சொக்கப்ப நாயக்கர் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு உள்ளிட்ட 64 இடங்களில் 17 சுகாதார ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு இரண்டு முதல் மூன்று சுகாதார மேற்பார்வையாளர்கள், 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 500 முதல் 1000 மீட்டர் தூரத்திற்கு இணைந்து குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் தூய்மை பணியை மேற்கொண்டார்கள்.
புதிய முயற்சி
மேலும் தூய்மைப்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் 1000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் மூலம் அழகுபடுத்தும் பணியும், பொதுமக்கள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களை வீசாமல் இருப்பதற்காக அனைத்து மின்கம்பங்களிலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வண்ண மூங்கில் கூடைகள் வைக்கப்படும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூய்மை படுத்தவும், சாலைகளில் ஓரம் உள்ள மணல்களை அகற்றவும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக பொறுப்பு நீதியின் கீழ் வாகனங்கள் பெற்று இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாபெரும் தூய்மை பணியினை தொடர்ந்து கண்காணிக்கவும் தொடர்ந்து மேற்கொள்ளவும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாபெரும் மக்கள் இயக்கமாக மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















