மேலும் அறிய

விருதுநகர் மக்களே உங்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.. இனி பாஸ்போர்ட்டுக்காக அலைய வேண்டாம் !

நடமாடும் கடவுசீட்டு அலுவலக சேவை மூலம் விருதுநகரில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்படவுள்ளது. - முழு விவரம் உள்ளே.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் சிவகாசி அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்
 
”தமிழகத்தின் பத்து தென்மாவட்ட மக்களின் பாஸ்போர்ட் சேவையை கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் சேவைகளை குடிமக்களுக்கு சரியான நேரத்தில், மிக எளிய முறையில் அணுகி சிரமமின்றி வழங்குவதற்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகமானது 2007 ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
நடமாடும் கடவுசீட்டு அலுவலக சேவை (Mobile Van Passport Seva)
 
மேலும் கடவுசீட்டு சேவையை அதிகரிக்கும் விதமாக மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின் கீழ் மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இரண்டு கடவுசீட்டு சேவை (PSK) மையங்களும் மற்றும் இதன் விரிவாக்கமாக 2018 ஆம் ஆண்டு புதிதாக எட்டு தபால் நிலைய கடவுசீட்டு சேவை மையங்களும் (POPSK) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை மேலும் விரிவு செய்யும் பொருட்டு தொலை தூர பகுதிகளுக்கும் பாஸ்போர்ட் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், பாஸ்போர்ட் சேவையை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும் வெளியுறவு துறை அமைச்சகமானது நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை (Mobile Van Passport Seva) என்ற சேவையை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
80 விண்ணப்பங்கள் வரை பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்கலாம்
 
இந்த சேவையானது விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருவில்லிப்புத்தூர் ரோட்டில் அமைந்துள்ள சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வரும் 02.09.2025(செவ்வாய்) மற்றும் 03.09.2025 (புதன்) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இரண்டு தினங்களுக்கு 80 விண்ணப்பங்கள் வரை பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு முன் அனுமதி பெற பாஸ்போர்ட் (Passport Seva https://www.passportindia.gov.in/) இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து "RPO Madurai Sivakasi Mobile Van" என்பதை தேர்வு செய்ய வேண்டும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் சிவகாசி அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” - என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பா.வசந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget