மேலும் அறிய

மதுரை மக்களே தீரும் தலைவலி... வருகிறது புதிய பேருந்துநிலையம் - எங்கு தெரியுமா..?

Madurai Checkanurani New Bus Stand: மதுரை அருகே செக்காணூரணி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா இணைந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

திருமங்கலம் செக்காணூரணியில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், அமைச்சர் பி.மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
 

முக்கிய பேருந்து நிலையம்

 
மதுரை மாவட்டம் செக்காணூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளுக்கு செல்ல முக்கிய பேருந்து நிலையமாக செக்காணூரணி பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலைய கட்டிடங்கள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட சூழலில் புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்ட இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
 

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள்

 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் செக்காணூரணி பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட சுமார் 8 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பழைய பேருந்து நிலையம் கடந்த வாரம் இடிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் கட்ட  அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பூமி பூஜை செய்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.
  

தமிழகத்தில் புதிய திட்டங்கள்

 
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். மேலும், ஒவ்வொரு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அந்தந்த துறை அலுவலர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ், சாலைகள் அமைக்கும் பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், நீர் வழங்கல் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

 
அந்த வகையில், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், செக்காணூரணியில் ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டம் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவில் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தங்கமா, வெள்ளியா..? குறுக்கே வந்த கெளசிக்... இன்றைய விலை தெரியுமா ?
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Health Ministry Warning: இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Embed widget