மேலும் அறிய

South Zone: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைக்கும் முன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - காவல்துறை வட்டாரங்கள்

59 நாட்களுக்குள் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதால் சமீபத்தில் 202 வழக்குகள் போஸ்கோ வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.  கைது நடவடிக்கை, போதை வஸ்துகள் பறிமுதல் என்பதோடு அல்லாமல், நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக, கடந்த 2022-ம் ஆண்டில் 13 கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ரூபாய் 12 அரைகோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
South Zone: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைக்கும் முன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - காவல்துறை வட்டாரங்கள்
 
அதே போல், மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் வகையில் செயல்படுவதாக தென் மண்டல காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். போக்ஸோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இதற்கு முன்னதாகவே சட்டப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

South Zone: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைக்கும் முன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - காவல்துறை வட்டாரங்கள்
 
மேலும் இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவேண்டும் என விரைவாக செயல்பட்டு வருகிறோம். அவர்களின் தொடர்பான வழக்கு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. போக்ஸோ வழக்கில் நிலையை கணக்கிட மூன்று வண்ணங்களில் அதன் குறிப்புகளை சேமிக்கிறோம். குற்றப்பத்திரிக்கை 45 நாட்கள் வரை தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் பச்சை நிற குறிப்புகளில் இருக்கும். 46 முதல் 50 நாள்வரை மஞ்சள் நிற குறிப்பில் இருக்கும். அதுவே 51-வது நாள் ஆகிவிட்டால் உடனடியாக சிவப்பு நிற குறிப்பில் சேர்ந்துவிடும் இதனால் உடனடியாக அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட ஏற்பாடுகள் எடுக்கப்படும். இப்படி பல்வேறு முறைகளில் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்க முயற்சிக்கிறோம்” என்றார்.
 
59 நாட்களுக்குள் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதால் சமீபத்தில் 202 வழக்குகள் போஸ்கோ வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: மீண்டும் குறுக்கிட்ட மழை; ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: மீண்டும் குறுக்கிட்ட மழை; ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: மீண்டும் குறுக்கிட்ட மழை; ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: மீண்டும் குறுக்கிட்ட மழை; ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget