மேலும் அறிய

அஜித்குமார் கொலை வழக்கு 11-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை; நிகிதா நேரில் ஆஜர் !

அஜித்குமார் வழக்கில், சம்பவத்திற்கான சாட்சிகளையும் பதிவுகளையும் உறுதி செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்குமார் கொலை வழக்கு 11 ஆவது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை - வழக்கின் முக்கிய நபரான நகை காணாமல் போனதாக புகாரளித்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் மூன்றரை மணி நேரமாக நடந்த விசாரணை.

மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு
 
சிவகங்கை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார். கடந்த 27-ஆம் தேதியன்று நகை காணாமல் போனது தொடர்பாக, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் கீழ் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து ஜூன் 28-ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவல்துறையினரை விசாரணைக்காக அஜித்குமாரை அழைத்துச்சென்று கோயில் உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் வைத்து அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5  பேர் கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.ஐ., விசாரணை நடைபெற்று வருகிறது.
 
பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை 
 
இந்நிலையில் 11ஆவது நாள் விசாரணையாக இன்று மதியம் 2 மணி முதல் நடைபெற்றது. அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான மடப்புரம் கோயிலில் காரில் வைத்த நகை காணாமல் போனதாக புகாரளித்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் DSP மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மூன்றரை மணி நேரமாக  விசாரணை நடத்திய நிலையில் புறப்பட்டனர்.
 
சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது
 
இதனிடையே  அஜித் குமாரின் வீட்டின் இடது புறம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த காட்சிகளில், சம்பவம் நடந்த நாளும் அதற்கு முந்தைய நாளும், தனிப்படை காவல்துறையினர் அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்களை எப்போது, எப்படி விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் மற்றும் அவரது சக ஊழியர்கள் வினோத்குமார், பிரவீன் குமார் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் அழைக்கப்பட்டு, அவர்களிடம் சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டு, சம்பவ நாளில் நடந்த நிகழ்வுகள் குறித்து திருமண மண்டபத்திற்குள் வைத்து விசாரணை நடத்திப்பட்டு வருகிறது‌. அப்போது சம்பவத்திற்கான சாட்சிகளையும் பதிவுகளையும் உறுதி செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget