மேலும் அறிய

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்

மதுரையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு 138 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ஏ.வி.மேம்பாலத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட மதுரை ஏ.வி.மேம்பாலம், வெள்ள பெருக்கையும், இயற்கை சீற்றங்களையும் கடந்து 138-வது ஆண்டுகளாக அதே கம்பீரத்தை தாங்கி நிற்கிறது. முல்லை பெரியாறு அணையை போல பலராலும் போற்றப்படும் ஏ.வி பாலம் மதுரையின் மிக முக்கியமான அடையாளம். மதுரை வழியாக ஓடும் வைகை ஆற்றில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன், முழுவதுமே வெள்ளப்பெருக்கு காணப்படும். இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து பாயும். ஆற்றங்கரைகளில் மதுரை சித்திரை  திருவிழா கோவிந்தா... கோவிந்தா... சத்தத்துடன் களைகட்டும். இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாத காலத்தில் மதுரையின் வட பகுதியில் இருந்து தென்பகுதிக்குச் செல்ல முடியாமல் இரு பகுதி மக்களும் தனித்தீவில் இருப்பது போல் தவித்தனர். மதுரை மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு ஏற்படும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் ஏ.வி.மேம்பாலத்தை கட்டினர். இந்த பாலம், கட்டி இன்று டிசம்பர் 8-ம் தேதியுடன் 137 ஆண்டுகளை நிறைவு பெற்று 138 ஆண்டை தொடங்குகிறது.

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து  கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
 
நூற்றாண்டு கடந்த ஏராளமான வெள்ள பெருக்கையும், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி தற்போது வரை கம்பீரம் குறையாமல் காணப்படும் இந்த ஏ.வி.மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் இன்று ஏ.வி.மேம்பாலத்தின் 138-வது கொண்டாட்டம் மற்றும் அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விழா எடுத்தனர். இதில் சமூக ஆர்வலர் இல.அமுதன், ஆழ்வார் ராஜா, அபுபக்கர் நீர் நிலைகள் பாதுகாப்பு நிறுவனர், சுற்றம் நட்பும் ஆசிரியர் இராமசுப்ரமணியன் ,பார்த்த சாரதி, மணிகன்டன்,கார்மேகம், திருகண்ணன், எம்மால் இயன்று, மணி, பழனிவேல் ராஜன், ஆறுமுகம்,திருநாவுக்கரசு,விக்னேஷ் வி.கே.ஜி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து  கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
 
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன் நம்மிடம்...,” ஏ.வி பாலம், கட்டுவதற்கு அப்போது ரூ.2.85 லட்சம் மட்டுமே செலவாகியுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை வாகனங்களின் எடையையும், அதன் வேகத்திற்கும் ஈடுகொடுத்து இந்த பழம்பெரும் பாலம் வலுவாக இருக்கும். இந்த ஏ.வி. மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்று வரை சான்றாக உள்ளது. மதுரையில் அதற்கு பிறகு கட்டிய பாலம் இடிக்கப்பட்டு சமீபத்தில் புதிய பாலம் கட்டிய வரலாறும் நடந்துள்ளது. ஆனால், இந்த பாலம் மட்டும் தற்போது வரை உயிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. மதுரை மக்களின் நெஞ்சங்களில் குடிக் கொண்டுள்ளது. இத்தனை சிறப்புமிக்க இந்த ஏ.வி.மேம்பாலம்பிறந்த நாள் கொண்டாடுவது அவசியமானது. தற்போது பாலத்தின் அடிப்பகுதிகள், கைப்பிடி சுவர்கள் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து கொண்டிருக்கிறது.

மதுரை ஏ.வி., பாலத்திற்கு 138-வது பிறந்தநாள்; ஆரஞ்ச் மிட்டாய் கொடுத்து  கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்
 
பாலத்தின் அடிப்பகுதி கான்கிரீட் உதிர்கிறது. பாலத்தின் அடிப்பகுதியில் பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் செல்லும் சில வட்ட வடிவத் தூண்களின் அடித்தளமும் சேதமடைந்துள்ளது. பாலத்தின் அடியில் உள்ள கருங்கல்கள் தண்ணீர் செல்வதால் பெயர்ந்து கொண்டிருக்கிறது. பாலத்தின் அஸ்திவாரத்தை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். நூறு ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை பாரம்பரிய சின்னம் என்று அறிவிப்பதை போல் ஏ.வி. மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.