மேலும் அறிய

மதுரையில் மண் சரிந்து 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நல்வாயப்பாக தப்பிய 3 தொழிலாளர்கள் !

மண் சரிவில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு - கட்டிட உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

மதுரை சிலைமான் அருகே மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்ட இரு பெண் தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விபத்து.  

கட்டுமானபணி

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் தங்கராசு என்பவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் கட்டும் பணி சில நாட்களாக  நடைபெற்றுவந்துள்ளது. மண்டபத்தின் கீழ்த்தளத்திற்காக 20 அடி அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இன்று பணிக்கு வந்த சிவகங்கை மாவட்டம் மணலூர் கிழக்கு சிலைமான் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(46) என்ற பெண்ணும்  சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழரசி(60) என்ற மூதாட்டி உள்ளிட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தனலட்சுமி மற்றும் தமிழரசி இருவரும் மதிய உணவு முடித்துவிட்டு கட்டடப் பணியில் ஈடுபடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே நடந்து சென்ற போது திடீரென  மண் சரிந்து பள்ளத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் மீதும் மண் விழுந்த மூடிய நிலையில் இருவரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நல்வாய்ப்பாக பள்ளத்திற்குள் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் தப்பியோடி கூச்சலிட்டுள்ளனர்.

உடலை மீட்டனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் மற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மண்ணை வெளியேற்றி தனலெட்சுமியின் உடலை மீட்டனர். ஆனால்  தமிழரசியின் உடலை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் மண்ணை தோண்டி தமிழரசியின் உடலை கயிறுமூலமாக கட்டி மீட்டனர். தமிழரசியின் மகள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் தனது தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மண் சரிவில் சிக்கி உயிரிழந்த இரு பெண் தொழிலாளர்களின்  உடல் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராயவிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமண மண்டபம் கட்டுவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டதா? விதிகளுக்கு உட்பட்டு மண்டபம் கட்டுமானம் நடைபெற்றதா? விபத்துக்காரணம் உள்ளிட்டவைகள் குறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் மண்டபம் கட்டுமான பணியின்போது மண் சரிவில் சிக்கி இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நூலிழையில் நல்வாயப்பாக தப்பிய 3 தொழிலாளர்கள்

சம்பவத்தை நேரில் பார்த்த செவனாயி என்ற பெண் தொழிலாளர் பேசும்போது..," நாங்கள் மூன்று பேரும் உணவு அருந்திவிட்டு நான் வெளியில் பணி செய்து கொண்டிருந்த போது இவர்கள் பள்ளத்தின் அருகே நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் அவர்கள் இருவரும் பள்ளத்திற்குள் விழுந்தனர் அவர்கள் மீது மண் குவிந்த நிலையில் பள்ளத்திற்கு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதனைப் பார்த்து கூச்சலிட்னர். பின்பாக இருவரும் நீண்ட நேரமாக வரமுடியாத நிலையில் மூச்சு திணறி உயிரிழந்து விட்டனர். கட்டிட உரிமையாளரின் தந்தை சின்னச்சாமி பேசும்போது நாங்கள் அருகில் தான் இருந்தோம் திடீரென விபத்து ஏற்பட்டதாக கூறினார்கள் வந்து பார்த்து மீட்பு பணியில் ஈடுபட்டோம் என தெரிவித்தார்

Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கை பேருந்து நிலையம்: சுவரோவியங்களால் உயிர்பெற்ற கலை!
சிவகங்கை பேருந்து நிலையம்: சுவரோவியங்களால் உயிர்பெற்ற கலை!
சிவகங்கையில் உணவகங்களில் அதிரடி சோதனை: 8 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்!
சிவகங்கையில் உணவகங்களில் அதிரடி சோதனை: 8 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்!
சிவகங்கை: பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆவண சிறப்பு முகாம்!
சிவகங்கை: பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆவண சிறப்பு முகாம்!
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. (e-NAM) திட்டத்தில் நேரடி விற்பனையால் அதிக லாபம் பெறலாம் !
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. (e-NAM) திட்டத்தில் நேரடி விற்பனையால் அதிக லாபம் பெறலாம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Embed widget