மேலும் அறிய
நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி என்ன?
எனது கோரிக்கை நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது. - சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Source : whatsapp
ஒன்றிய அரசின் இதர பணிகளுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். - மதுரை எம்.பி
ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவுத் தேர்வு அறிவிப்பு.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தியில்..," ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றி. தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஒன்றிய அரசு பணிகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நியமனங்களை பெறுவது, அலுவலக சேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
பணிய நியமனம் பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில அளவிலான நியமன தேர்வு நடைபெற வேண்டும் என்றும், மாநில மொழி அறிவு கொண்டவர்கள் பணி நியமனங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய வகையில் கல்வித் தகுதி உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது மத்திய ஊழியர் தேர்வாணையம் (Government of India, Ministry of Personnel, Public Grievances & Pensions, Department of Personnel and Training, Staff Selection Commission) 21.05.2026 அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கையில் உதவித் தணிக்கை அலுவலர் (மாநிலப் பதவி), உதவி கணக்கு அலுவலர் (மாநிலப் பதவி) ஆகிய பணிகளுக்கு மாநில மொழி அறிவு தேவையென்றும், அதற்கு 10 ஆம் வகுப்பு மட்டத்திலான அரசு தேர்வு ஆணையங்கள் வழங்கியுள்ள சான்றிதழ்கள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கேயே பணிய நியமனம் பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது.
எனது கோரிக்கை நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது. இது குறிப்பிடத்தக்க வெற்றி. ஒன்றிய அரசின் இதர பணிகளுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்னையை தொடர்ந்து வலியுறுத்திய அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்கள், வருமான வரித்துறை ஊழியர் சங்கம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















