மேலும் அறிய

கொடைக்கானலில் புதிதாக சாலை அமைக்கவில்லை; மண்சாலையே தார்சாலையாக அமைக்கப்படுகிறது - சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் வாதம்

வனம் வழியாக எந்த புதிய சாலையும் அமைக்கப்படவில்லை. நீண்ட ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாத வெள்ளகவி கிராமத்தின் மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியே நடக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பழனி, பெரியகுளத்தின் சில பகுதிகள் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி ஆகியவற்றை  வனவிலங்கு சரணாலயமாக  அறிவித்து, அரசு அரசாணையை வெளியிட்டது. கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் 608 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல வகையான புல்வகைகள், தூய்மையான நீர் நிலைகள் என சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சூழல் உள்ளது. 
 
இந்நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மார்ச் 2 ஆம் தேதி ஆய்வு செய்து வட்டக்கானல் பகுதி வழியாக டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்தை அடைய வனப்பகுதி வழியாக  சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்படும். இப்பகுதியில் சாலை அமைக்க முறையான அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் அது போல எவ்விதமான அனுமதியும் பெறப்படவில்லை.  ஆகவே கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாதலத்திற்கு வட்டக்கானலிலிருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில்,"வனம் வழியாக எந்த புதிய சாலையும் அமைக்கப்படவில்லை. நீண்ட ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாத வெள்ளகவி கிராமத்தின் மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியே நடக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.அதனை பதில்மனுவாக தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

 
வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக பட்டுக்கோட்டை பதிவாளர் அலுவலக உதவியாளர் சந்திரசேகரன் மீதான புகார் - தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
 

பட்டுக்கோட்டை பதிவாளர் அலுவலக உதவியாளர் சந்திரசேகரன் , தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.அதனஅடிப்படையில், இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பதாகக் கூறி விசாரித்த தனிநீதிபதி வழக்கு குறித்து பதிவுத்துறை செயலர், தஞ்சை ஆட்சியர், பதிவுத்துறை ஐஜி, லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சந்திரசேகரன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில், சந்திரசேகரன் மீது ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்பாகவே இரண்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. சந்திரசேகர் மீது புகார் அனுப்பிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் பதிவாளர் பாக்கியம் சிக்கந்தர் என்பவர் மீதான புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘இது தொடர்பான புகார்கள் கடிதமாக வந்தால், நிர்வாக நீதிபதி மூலம் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும். ஆனால், பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, பொதுநல மனுவைப் போல உத்தரவிட முடியாது. எனவே, கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த  மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
மீனவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! தமிழகத்தில் 8 இடங்களில் புதிய துறைமுகங்கள்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
மீனவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! தமிழகத்தில் 8 இடங்களில் புதிய துறைமுகங்கள்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
திமுக கொடியேற்றத்தில் நெகிழ்ச்சி! ஸ்டாலினுக்கு உதவிய தொண்டர்கள்: மயிலாடுதுறையில் உணர்ச்சிமிகு தருணம்!
திமுக கொடியேற்றத்தில் நெகிழ்ச்சி! ஸ்டாலினுக்கு உதவிய தொண்டர்கள்: மயிலாடுதுறையில் உணர்ச்சிமிகு தருணம்!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
Embed widget