மேலும் அறிய

பயங்கரமாக மோதிக்கொண்ட 2 யானைகள்.. அலறிய மக்கள்.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில்  நேற்று மாலை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றி பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது . இதை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.


பயங்கரமாக மோதிக்கொண்ட 2 யானைகள்.. அலறிய மக்கள்.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதனால் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். இருப்பினும் யானைகள் கடுமையாக மோதிக்கொண்டன. யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி சேதமானது.


பயங்கரமாக மோதிக்கொண்ட 2 யானைகள்.. அலறிய மக்கள்.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

இந்த சம்பவத்தில், யானைகளுக்கு இடையே சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (வயது65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மேலும், படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட உயர் அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.


பயங்கரமாக மோதிக்கொண்ட 2 யானைகள்.. அலறிய மக்கள்.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

இந்த நிலையில்  திருவிழாவின்போது யானைகள் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை வனப் பாதுகாவலர் ஆர்.கீர்த்தி ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரனிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கீர்த்தி கூறினார். மேலும் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், யானைகள் அவற்றுக்கிடையே தேவையான தூரத்தை பராமரித்ததாக ஊழியர்கள் தெரிவித்ததாகவும், விரிவான ஆய்வு நடந்து வருகிறது எனவும் கூறினார். சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 2 யானைகளை அணிவகுத்துச் செல்ல அனுமதி இருந்தது. உள்ளூர் யானை மேலாண்மை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்போம் என்றும், ஏதேனும் குறைபாடு இருந்தால், அறிக்கையில் கடுமையான நடவடிக்கை பரிந்துரைக்கப்படும் என்று கீர்த்தி கூறினார். கோவிலைப் பார்வையிட்ட பிறகு, கீர்த்தி மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்.


பயங்கரமாக மோதிக்கொண்ட 2 யானைகள்.. அலறிய மக்கள்.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

மேலும் குறவங்காடு மணக்குளங்கரை கோவிலில் யானை ஊர்வலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்று காலை விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோவில் குழு உறுப்பினர் சி.உன்னி என்பவர் கூறுகையில், கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. மக்களைக் கட்டுப்படுத்த கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. யானையும் மக்களும் போதுமான இடைவெளி இருந்ததாக உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை செயல்படுத்துவதில் எந்த குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் சம்பவம் நடந்தது குறித்து  அனைத்து  ஆவணங்களும் உள்ளன. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று உன்னி தெளிவுபடுத்தியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Embed widget