மேலும் அறிய

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

கேரளாவில் மீண்டும்  முழு உடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி உள்ள நிலையில், இரு மாநில எல்லையில் கேரள போலீசார் கெடுபிடி காட்டுவதால், இரு மாநில மக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. கொரோனா தொற்றின்  முதல் அலையை எளிதாக  கட்டுப்படுத்திய கேரளா, தற்போது உருவாகி உள்ள 2-வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது . 
கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாட்டில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையிலும் கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்பு இன்றளவும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியே உள்ளது.

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நேற்று 43,509 ஆக இருந்தது. இதில் கேரளாவில் மட்டும் 22,056 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நாட்டில் கொரோனா பாதிப்பு சதவிகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது. எனவே கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது.

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது கேரள மாநில அரசு. மேலும் இறப்பு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் 20-க்கும் குறைவான நபர்களே பங்கேற்க வேண்டுமென்று அறிவித்துள்ளது. இதனால்  தேனி மாவட்டத்தில் இருக்கும் தமிழக கேரள எல்லை பகுதியான குமுளி, கம்பம் மெட்டு போன்ற பகுதிகளில் கேரள போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டிலிருந்து  செல்லும் நபர்கள் கேரளாவிற்கு நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக,கேரள எல்லையில் கெடுபிடி  :-

 கேரளாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம்  தமிழக கேரள  எல்லைப்  பகுதியில் அமைந்துள்ள குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்வதற்கு கேரள போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களிலும்,  இரு சக்கர வாகனங்களிலும் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு  வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தோட்ட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் முற்றிலுமாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

கேரள போலீஸார் இ பாஸ் மற்றும் கொரானா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், கொரோனோ இல்லை சான்றிதழ் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்த பின்பே எல்லையில் அனுமதிக்கின்றனர்.  மேலும் கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள்  இ பாஸ் மற்றும் வெப்ப பரிசோதனை செய்த பின்பு   தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எல்லையில் கேரள அரசு மிகவும் கெடுபிடி காட்டுவதால் இருமாநில மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget