ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம்! 1000 புது ரயில்கள், புல்லட் ரயில் 2027ல்! டிக்கெட் செலவு குறையும்!
கடந்த 2 ஆண்டுகளில் 2,000 ஜெனரல் கோச் சேர்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அம்ரித் பாரத், நமோ பாரத் மாதிரி புது ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்திய ரயில்வே துறையில் நிறைய மாற்றங்கள் வரவிருக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகலில் 1,000 புது ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புல்லட் ரயில்கள் 2027ஆம் அண்டில் இயங்கும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கி.மீ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது ஜெர்மனி நாட்டின் மொத்த ரயில் பாதையை விட அதிகம். ஒரே ஆண்டில் 5,300 கி.மீ பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 30,000 சரக்கு ரயில் சேவைகளும், 1,500 இன்ஜின்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
இது வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து தயாரிப்பதை விட அதிகமாம். ரயில்வே துறைக்காக செலவிடும் தொகையும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ரூ. 25,000 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ. 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, பொது-தனியார் கூட்டிணைவில் இருந்து ரூ. 20,000 கோடி அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்தை ரயில் மூலம் மேற்கொள்வதால் அதிக பணம் மிச்சமாகிறது. இந்திய ரயில்வே இப்போது 29 சதவீத சரக்குகளை ஏற்றி இறக்குகிறது.

இதை 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் புல்லட் ரயில் திட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதன் மாதிரி ரயில் 2026ஆம் ஆண்டில் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டில் முழுவதும் வியாபார ரீதியாக ஓட ஆரம்பிக்கும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். IIT மெட்ராஸ், IIT ரூர்க்கி மாதிரி இன்ஸ்டிடியூட்ஸ் ஆராய்ச்சிக்கும், டிசைனுக்கும் உதவி செய்கின்றன. இவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்கின்ற்ன. ரயில் பயணிகளுக்காக, டிக்கெட் செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2,000 ஜெனரல் கோச் சேர்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அம்ரித் பாரத், நமோ பாரத் மாதிரி புது ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்திய ரயில்வே கட்டணம் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விடக் குறைவு என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு விஷயங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில் தடம் புரள்வது ஆண்டுக்கு 170 என்ற எண்ணிக்கையில் இருந்து 30க்கு கீழ் குறைந்துள்ளது. ரயில் விபத்துகள் 80 சதவீதம் குறைந்துள்ளன. இந்திய ரயில்வேயை முழுவதும் தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான், ஸ்விட்சர்லாந்து நாடுகளைப் போல இந்தியாவிலும் ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய அரசு பல நடவடிகக்கைகளை எடுத்துள்ளது. டிக்கெட் செலவுகளைக் குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் 2,000 ஜெனரல் கோச் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல, அம்ரித் பாரத், நமோ பாரத் போல புது ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரயில்களில் நிறைய வசதிகள் உள்ளன. ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை மக்களும் ரயில்களில் சுலபமாகப் பயணிக்க முடிகிறது. ரயில்வே துறையில் நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.





















