மேலும் அறிய

மாணவனை தாக்கிய எஸ்.ஐ;  ராமநாதபுரம் எஸ்.பி நேரில் விளக்கம்அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாணவன் உள்பட இருவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் துணை ஆய்வாளர் ஜோதிமுருகன் உள்ளிட்டோர்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு.

பாதிக்கப்பட்ட மனுதாரரின் கோரிக்கை  குறித்து ஏன் இதுவரை பரிசீலிக்கவில்லை? என கேள்வி எழுப்பியதுடன் தமிழ்நாடு காவல்துறை தலைவர் DGP  மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் SP நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துமாரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, எனது, மூத்த மகன் டேவிட் டிரைவர்  மற்றும் இளைய மகன் கார்த்திக் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி கேணிக்கரை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் காவல்துறை வாகனத்தில் வீட்டிற்கு வந்து எனது மகன்களை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார். 

மாணவனை தாக்கிய எஸ்.ஐ;  ராமநாதபுரம் எஸ்.பி நேரில் விளக்கம்அளிக்க நீதிமன்றம் உத்தரவு
 

அடித்து உதைத்து மிரட்டிய காவல்துறை:

இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்ற போது எனது மகன் உள்பட 4 பேர் மீது அனுமதி இன்றி பட்டாசு வெடித்ததாக கூறினர். இந்நிலையில் காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் காவலர்கள் எனது மகன்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த எனது மகனை உயிரை காப்பாற்றுவதற்காக சைல்ட் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். 
 
உடனடியாக சைல்ட் லைன் அமைப்பினர் காவல்நிலையத்திற்கு வந்து தனது மகன்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை தடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கில்  புகாரளித்த தமிழ்ச்செல்வி என்பவர் வழக்கை திரும்ப பெற்றதாக கூறி எனது மகன்கள் விடுவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து சிகிச்சைக்காக எனது மகன்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறவிடாமல் காவல்துறையினர் தடுத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் காவல்துறையினர் மீது எங்கும் புகார் கொடுக்கக்கூடாது என எங்களை அச்சுறுத்தியதோடு எங்கள் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டினர். 


மாணவனை தாக்கிய எஸ்.ஐ;  ராமநாதபுரம் எஸ்.பி நேரில் விளக்கம்அளிக்க நீதிமன்றம் உத்தரவு
 

நீதிமன்றத்தில் மனு:

 
எனவே, பொய்யான குற்றச்சாட்டில் எனது மகன்களை சட்டவிரோதமாக சிறையில் வைத்து கொடூரமாக கொலை வெறி தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் உடனிருந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு உதவி ஆய்வாளர் ஜோதி முருகன்  மனுதாரரின் இரண்டு மகன்களையும் கொடூரமாக காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த  காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்த இரண்டு வருடம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய வழக்கறிஞர் தாக்குதலில் காயம் அடைந்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
 

நீதிபதி சரமாரி  கேள்வி:

இதனைத் தொடர்ந்து நீதிபதி காவல் நிலையத்தில் வைத்து மாணவன் உள்பட இருவரை கொலை வெறி தாக்குதல் நடத்திய துணை காவல் ஆய்வாளர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல் திருப்தி அளிக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு காவல்துறை தலைவர் DGP மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் IG ஆகியோர்  மனுதாரரின் கோரிக்கை குறித்து ஏன் பரிசீலிக்கவில்லை என்பதற்கான விளக்கமளிக்கும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி.
 
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில்ராஜர் ஆகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 18 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget