மேலும் அறிய

தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு . சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்க தடை.

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிகபட்சமாக போடிநாயக்கனூரில் 6.4 மி.மீ, சோத்துப்பாறை பகுதியில் 5.0 மி.மீ, வைகை அணை பகுதியில் 4.0 மி.மீ,  ஆண்டிபட்டி பகுதியில் 4.2 மி.மீ, பெரியகுளம் 3.6 மி.மீ,  தேக்கடியில் 6.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வீரபாண்டி, போடி, உத்தமபாளையம் உள்பட பல இடங்களிலும் மிதமான மற்றும் கனமழை பெய்தது.


தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

பெரியகுளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்லாற்று பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் வராக நதியில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர பகுதியில் இருந்த மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நேற்று காலை ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே மீண்டும் மழை பெய்தது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து தடை இன்று வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது போடி அருகே உள்ள மேலப்பரவில் இருந்து காய்கறிகள்  மூட்டைகளை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று போடிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை போடியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றார். டிராக்டரில் வியாபாரியான இப்ராகிம் மற்றும் 3 பெண்கள் சென்றனர். கொட்டக்குடி ஆற்றில் வழியாக சென்றபோது டிராக்டர் ஆற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து டிரைவர் டிராக்டரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டிராக்டர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் உள்பட 4 பேரும் டிராக்டரில் இருந்து குதித்து ஆற்றின் கரையை அடைந்து உயிர் தப்பினர். இதற்கிடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட டிராக்டர் பள்ளத்தில் மூழ்கியது.


தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியால் தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 219 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூலை மாதம் 31-ந் தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் 15-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. தொடர்ந்து 100 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 158 கன அடியாக உள்ளது. இந்த நீர் அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.


தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget