மேலும் அறிய

தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு . சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்க தடை.

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிகபட்சமாக போடிநாயக்கனூரில் 6.4 மி.மீ, சோத்துப்பாறை பகுதியில் 5.0 மி.மீ, வைகை அணை பகுதியில் 4.0 மி.மீ,  ஆண்டிபட்டி பகுதியில் 4.2 மி.மீ, பெரியகுளம் 3.6 மி.மீ,  தேக்கடியில் 6.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வீரபாண்டி, போடி, உத்தமபாளையம் உள்பட பல இடங்களிலும் மிதமான மற்றும் கனமழை பெய்தது.


தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

பெரியகுளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்லாற்று பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் வராக நதியில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர பகுதியில் இருந்த மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நேற்று காலை ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே மீண்டும் மழை பெய்தது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து தடை இன்று வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது போடி அருகே உள்ள மேலப்பரவில் இருந்து காய்கறிகள்  மூட்டைகளை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று போடிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை போடியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றார். டிராக்டரில் வியாபாரியான இப்ராகிம் மற்றும் 3 பெண்கள் சென்றனர். கொட்டக்குடி ஆற்றில் வழியாக சென்றபோது டிராக்டர் ஆற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து டிரைவர் டிராக்டரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டிராக்டர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் உள்பட 4 பேரும் டிராக்டரில் இருந்து குதித்து ஆற்றின் கரையை அடைந்து உயிர் தப்பினர். இதற்கிடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட டிராக்டர் பள்ளத்தில் மூழ்கியது.


தேனியில் கனமழை எதிரொலியால் ஆறுகள் , அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியால் தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 219 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூலை மாதம் 31-ந் தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் 15-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. தொடர்ந்து 100 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 158 கன அடியாக உள்ளது. இந்த நீர் அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget