மேலும் அறிய

அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என தெரியவில்லை - அதிமுக முன்னாள் எம்எல்ஏ

மோடி பெயரை அரவக்குறிச்சியில் அழித்தது அண்ணாமலை தான். அண்ணாமலை என்பவர் சுய விளம்பரத்துக்காக அரசியலில் இருப்பவர்.

அதிமுகவைப் பற்றி பேசும் அண்ணாமலைதான் உண்மையான தற்குறி, இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் ஆட்டுக்குட்டி மேய்ப்பதற்காக அண்ணாமலை நிச்சயமாக சென்று விடுவார். அப்போது பிஜேபி நிற்கதியாக தமிழ்நாட்டில் இருக்கும்  என அதிமுக மாநில இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோயில் தெருவில் உள்ள முனியப்பன் கோவில் மண்டபத்தில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 வார்டுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு 3750 உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. 


அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என தெரியவில்லை - அதிமுக முன்னாள் எம்எல்ஏ

அதன் பின்னர் பேசிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பரமசிவம், “இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றி தமிழ்நாட்டை கூறு போட்டுக் கொண்டிருக்கும் அந்த சக்தியோடு சேர்ந்து நமக்கு பதவி வேண்டும் என்றால் அப்படிப்பட்ட பதவி வேண்டாம். யார் சொன்னது பிஜேபியுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக தான் சொன்னது. நமது தலைமையைப் பற்றி பேசும் அண்ணாமலை தான் உண்மையான தற்குறி. பேரறிஞர் அண்ணாவை தரை குறைவாக பேசிய அண்ணாமலை தான் தற்குறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சையாக பேசி மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என கெஞ்சி கொண்டிருக்கிற அண்ணாமலை தான் தற்குறி.

அண்ணாமலை என்பவர் ஒரு அரசியல் அனுபவமற்ற, அரசியலுக்கு லாயக்கு இல்லாத தலைவர் என்பதை தனது பேச்சிலேயே நிரூபித்துள்ளார். ஒரு அடிப்படை அறிவு இல்லாதவர் பேசுவதைப் போல இன்று அண்ணாமலை பேசுகிறார். பி.ஜே.பி கட்சியினுடைய தொண்டர்களின் உழைப்பை கவலைக்கிடம் செய்து கொண்டு, தன்னை மட்டும் வளர்த்து தன் பெயர் தெரிய வேண்டும் என்று நினைப்பவர் அண்ணாமலை. அண்ணாமலை விவசாயின் மகன் தானே, உன் மோடி ஆட்சியில் இருக்கும் போது பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2020-2021 கடைசி ஆண்டில் ஒரு விவசாயிக்கு கூட பணம் வழங்கவில்லை. பட்ஜெட் இல்லை என்று. ஆனால் அந்த ஆண்டிற்கான அத்தனை பயிர் காப்பீடு திட்டத்தையும் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டது.


அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என தெரியவில்லை - அதிமுக முன்னாள் எம்எல்ஏ

தமிழ்நாட்டின் மீனவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்துகிறார்கள், கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை சரியான ஆண்மகன் என்றால் கச்சத்தீவை மீட்பதற்கு எங்களிடம் திட்டம் உள்ளது என்றும், பாரத பிரதமர் மோடி இன்னும் நான்கு ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்பார் என்று அண்ணாமலை சொல்லட்டும். அவர் சொல்வதெல்லாம் கேட்டு அண்ணாமலையை முதலமைச்சராக ஆக்குகிறோம். அரசியல் செய்வதற்காக மட்டுமே அண்ணாமலை வந்துள்ளார். தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர் வரவில்லை. முன்னாள் அமைச்சருக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை.

பத்து ஆண்டு பச்ச இங்கில் கையெழுத்து போடும்போது நான் கன்னடிகா கன்னடிகா என்று கூறிய வீடியோக்கள் இங்கதான் இருக்கிறது. இன்று நீ தற்குறி என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தான் அரவக்குறிச்சியில் உனக்கு வாக்கு சேகரிக்கும் போது பின்னாடி கைகட்டி நின்று கொண்டிருந்தார். மோடி பெயரை அரவக்குறிச்சியில் அழித்தது அண்ணாமலை தான். அண்ணாமலை என்பவர் சுய விளம்பரத்துக்காக அரசியலில் இருப்பவர். இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் ஆட்டுக்குட்டி மேய்ப்பதற்காக நிச்சயமாக சென்று விடுவார். அப்போது பிஜேபி நிற்கதியாக தமிழ்நாட்டில் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Embed widget