மேலும் அறிய

தமிழகம் முழுவதும் விவசாயிகள் கண்ணீருடன் போராட்டம் - காரணத்தை சொன்ன ஆர்.பி.உதயகுமார்

”தமிழகத்திலே விவசாயிகள் ஒரு தொடர் போராட்டமாக நடைபெற்று வருகிறது. இதை கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் விவசாயிகள் அபய குரலை  செவிகொடுத்து கேட்பதற்கு முதலமைச்சருக்கு நேரமில்லை” - ஆர்.பி.உதயகுமார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,”தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மக்கள் விரோத ஆட்சியிலே முல்லைப் பெரியாறு, காவேரி ,செய்யாறு சிப்காட், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் கால்வாய், 58 கால்வாய் என்று திரும்பிய திசை என்றும் தமிழகத்திலே விவசாயிகள் ஒரு தொடர் போராட்டமாக நடைபெற்று வருகிறது. இதை கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் விவசாயிகள் அபய குரலை  செவிகொடுத்து கேட்பதற்கு முதலமைச்சருக்கு நேரமில்லை, அவருக்கு இருக்கிற நேரமெல்லாம் தன் பெற்றெடுத்த தவப்புதல்வன் உதயநிதி ஸ்டாலினை மகுடம் சூடுவதற்கு விழாக்களை எடுப்பதிலே அவர் தன்னுடைய நேரத்தையும், கவனத்தையும் முழுமையாக அர்ப்பணித்து வருகின்ற காரணத்தினால், விவசாயிகள் எழுப்புகிற அபாய குரல் முதலமைச்சருடைய காதுகளில் சென்று சேரவில்லை, சென்று சேர்ந்தாலும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை, அப்படி அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் அதற்கு அக்கறை செலுத்தவில்லை, ஆகவே தான் விவசாயகளின் போராட்டம் நாடெங்கும் காட்டுத் தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.


தமிழகம் முழுவதும் விவசாயிகள் கண்ணீருடன் போராட்டம் - காரணத்தை சொன்ன ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சருடைய நடவடிக்கைகளை நாம் பார்க்கிற போது நாடு பற்றி எரிகிற போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல, விவசாயிகளின் போராட்டம் காட்டுதீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கிற போது, தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீரை பெற்று தரவும் முயற்சி எடுக்கவில்லை. எடப்பாடியார் கொண்டு வந்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் என்னவென்று தெரியவில்லை? நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு மூடு விழாவை திமுக அரசு நடத்தி விட்டது. மீத்தேன்,ஈத்தேன் நிலக்கரி சுரங்கம் போன்றவற்றில் இருந்து காப்பாற்ற டெல்டா பகுதிகளில் சிறப்பு வேளாண் மண்டலத்தை உருவாக்கினார். அதேபோல் நூறாண்டு திட்டமான காவேரி வைகை குண்டாறு திட்டத்தினை 14,400 கோடி அளவில் தொடங்கி வைத்து, இந்த திட்டத்தை துவக்கி வைக்கிற பாக்கியத்தை நான் பெற்றதிலேயே என் பிறவிபயனை அடைந்தேன் என்று எடப்பாடியார் கூறினார்.


தமிழகம் முழுவதும் விவசாயிகள் கண்ணீருடன் போராட்டம் - காரணத்தை சொன்ன ஆர்.பி.உதயகுமார்


குடி மாராமத்து திட்டத்தின் மூலம் 1132 கோடியிலே, 5586 நீர்நிலைகள் தூர்வாரினார் நதிநீர் இணைப்பு திட்டமாக இருந்தாலும், நீர்நிலைகளை பாதுகாப்பதாக இருந்தாலும், நீர் நிலைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக இருந்தாலும் தானும் ஒரு விவசாயி என்பதிலே விவசாயம் மீது தனி அக்கறை செலுத்தினார். அணைகளிலிருந்து  உரிய நேரத்தில் நீரை திறந்து  பாசன பரப்பளவில் முழுமையாக 100% பயிர் செய்ய முடிந்தது விளைச்சலை காண முடிந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கிற திமுக அரசு கும்பகர்ண தூக்கத்திலே, கோமா நிலையில் இருக்கக்கூடிய அரசாக உள்ளது. டெல்டா மாவட்டம், தென் மாவட்டம் என அந்த விவசாயிகள் இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்ற ஒரு நிலையை  உருவாக்கி இருக்கிறார்கள் இதை நாம் எங்கே முறையிடுவது? தண்ணீரை திறந்து விட கூட இந்த முதலமைச்சருக்கு மனமும் இல்லை, நேரமில்லை, மக்கள் மீது அக்கறை இல்லை, விவசாயிகள் மீது கருணை இல்லை என்ற ஒரு நிலையை பார்க்கிற போது இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் இந்த நாடு இதுவரை சந்தித்ததில்லை.


தமிழகம் முழுவதும் விவசாயிகள் கண்ணீருடன் போராட்டம் - காரணத்தை சொன்ன ஆர்.பி.உதயகுமார்

 வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என்பதை இங்கே ஒரு தொடர் வேதனை நிகழ்வாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிற போது இந்த ஆட்சியில் தொடர் சம்பவங்களாக  விவசாயிகள் இன்றைக்கு தங்களுக்கு பெற்றுத் தர வேண்டிய தண்ணீரை கொடுக்கவும் மறுக்கிறார், பெற்று தரமறுக்கிறார் ஒரு கொடுங்கோல் அரசாக, மக்கள் விரோத அரசாக, சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டிலே திரும்பி திசையெல்லாம் இன்றைக்கு செய்யார் சிப்காட்டில் இருந்து முல்லை பெரியார், திருமங்கலம் பிரதான கால்வாய், 58 கால்வாய், மேலூர் கால்வாய் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீரை தாருங்கள் என்று கண்ணீரோடு விவசாயிகள் போராடி வருகிறார்கள் ஆனால் விவசாயிகள் மீது மீது அக்கறை செலுத்துவதற்கு அரசுக்கு மனம் வரவில்லை” என கூறினார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: சென்னையில் திடீர் மழை! போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
Breaking News LIVE: சென்னையில் திடீர் மழை! போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Embed widget