மேலும் அறிய

வெளிநாட்டில் கிடைத்த வேலை... நாய் கடித்ததால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து - மதுரைக்காரர் வேதனை

10க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ள இந்த நாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

நாய் கடித்ததால் வெளிநாட்டு வேலைக்கு செல்லவிருந்த நபரின் பயணம் ரத்தான விசயம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.
 

வெளிநாட்டில் வேலை

 
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் ஒட்டிய பகுதிகளில் பெரியளவு வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அதிகளவு வெளிநாட்டு வேலையை நம்பியுள்ளனர். இந்த சூழலில் குடும்ப சூழல் காரணமாக வெளிநாடு செல்லவிருந்த நபரை வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததால் அவருடைய பயணமே ரத்தாகியுள்ளது, என வேதனை தெரிவித்துள்ளார்.
 

காவல் நிலையத்தில் புகார் 

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த  கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்து வரும் நிலையில் ஒரு நாய் சாதுவாகவும் மற்றொரு நாய் பயங்கர கோபம் கொண்ட நாயாகவும் இருந்துள்ளது. இந்த சூழலில் கோபமுடைய நாயானது கீழவளவு கிராமத்தில் பெண் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கீழவளவு கிராமத்தை சேர்ந்த கேசவன் என்பவரை கருப்பையாவின் நாய் கடித்துள்ளது. இதன் காரணமாக கேசவனுக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கேசவன் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் கேசவனுக்கு நாய் கடித்து தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர் என கூறி அவரது பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து காயப்படுத்தி உள்ள இந்த நாயை ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்போடு அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கேசவன் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 

நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை

 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கருப்பையாவின் நாய் பலரையும் கடித்துள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை. தற்போது ஒருவர் வெளிநாடு செல்லும் பயணமே ரத்தாகியுள்ளது. தொடர்ந்து இந்த நாய் பொதுமக்களை கடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம். எனவே காவல்துறையும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Embed widget