மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மானாமதுரை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
இந்த கல்லானது ஒரு கல்வெட்டாக மட்டுமல்லாமல் எல்லைக் கல்லாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.
![மானாமதுரை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு Discovery of an inscription with Kottoviyam in the village of Kalathiyenthal near Manamadurai மானாமதுரை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/b855b144c579603a9e1714efc9268bd2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்வெட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் ஒரு கல் இருப்பதாக காளத்தியேந்தலை சேர்ந்த சமயக்குமார் என்ற இளைஞர் கொடுத்த தகவலின்படி பண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில், இந்த கல்வெட்டானது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரி ஓவியத்துடன் கல்வெட்டு காணப்படுகின்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
— Arunchinna (@iamarunchinna) April 26, 2022
Further reports to follow - @abpnadu | #sivagangai | #கீழடி | #மானாமதுரை | #கல்வெட்டு | #TamilNadu ..... pic.twitter.com/fjqP6QFTTw
பெரும் பகுதி சிதிலமடைந்த நிலையில் உள்ள அந்த கல் மூன்று அடி உயரம் உள்ளது. மேல் பகுதியில் திருமாலின் வாமன அவதார குறியீடுகளான குடையும் கமண்டலமும் ஒரு சங்கும் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளன, கீழ் பகுதியில் ஆறு வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன முதல் வரியில் அழகர்சாமி என்றும் மூன்றாவது வரியில் வாணாதிராயன் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும் வாணாதிராயன் என்பவர் மானாமதுரை பகுதியை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னராவார்.
![மானாமதுரை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/b855b144c579603a9e1714efc9268bd2_original.jpg)
’மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ‘ - பாண்டிகோயிலில் 3 லட்சம் தட்டுப்பணம் திருடப்பட்ட வழக்கு - 5 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது மதுரை உயர்நீதிமன்றம்
அவரின் ஆனையின் படி அழகர்சாமி என்பவர் இப்பகுதியில் இருந்த திருமால் கோயிலுக்கு நிலங்களை தானமாக தந்ததன் நினைவாக இக்கல்வெட்டை பதிவு செய்திருக்கலாம். இந்த கல்லானது ஒரு கல்வெட்டாக மட்டுமல்லாமல் எல்லைக் கல்லாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். இப்பகுதி மக்கள் இந்த கல்வெட்டுடன் கூடிய கோட்டோவியத்தை தொட்டிக்கள் முனி என்று வணங்கி வருகின்றனர் என்று அவர்கள் கூறினார்கள்.
’ இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ’’பாசிச பாஜக ஒழிக’’ புகழ் சோபியா தொடந்த வழக்கு - தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் பதில் தர உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
செய்திகள்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion