மேலும் அறிய

Dindigul: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழனி அடிவார ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

உயர்நீதிமன்ற உத்தரவினை ஏற்று பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் தரப்பட்டது. இதையடுத்து குடியிருப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

பழனி கோயிலை சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பாளர்களில் மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்  மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை, தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.


Dindigul: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழனி அடிவார ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவலப் பாதையில் அண்ணா செட்டி மடம் என்ற இடத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் குடியிருப்புகளை அகற்ற கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அனைத்தையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்கினர்.


Dindigul: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழனி அடிவார ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

இந்த நிலையிலும் பழனி கோயிலை சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள 139 ஆக்கிரமிப்பாளர்களிடம், மாற்று இடம் செல்ல சம்மதம் தெரிவித்து கையொப்பம் இடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு,  கால அவகாசம் கொடுக்க வேண்டுமெனவும், மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
குறிப்பிட்டிருந்த கால அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் எடுக்காதவர்களை தாசில்தார் தலைமையில் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாசில்தார்  தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று பழனி மலை அடிவாரத்தில் கடைகள் மற்றும் 100 குடியிருப்புகளை அகற்றும் பணி  நடைபெற்றது. உயர்நீதிமன்ற உத்தரவினை ஏற்று பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் தரப்பட்டது. இதையடுத்து குடியிருப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

Dindigul: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழனி அடிவார ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வருவாய்த்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வானங்களை கொண்டு வரபட்டு  கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது.

குடியிருப்புகளை அகற்றும்போது குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் பாதுகாப்பு பணியில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும் பணி நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
Madurai Power Shutdown ; மேலூர் மின்தடை: 18.07.2026 உங்க ஏரியாவும் உள்ளதா என செக்பண்ணவும் !
Madurai Power Shutdown ; மேலூர் மின்தடை: 18.07.2026 உங்க ஏரியாவும் உள்ளதா என செக்பண்ணவும் !
சிவகங்கை: நீர்நிலைகளில் இலவச வண்டல் - களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!
சிவகங்கை: நீர்நிலைகளில் இலவச வண்டல் - களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!
உசிலம்பட்டி சொகுசு விடுதியில் பயங்கர தீவிபத்து: மின்கசிவால் கூட்ட அரங்கம் நாசம், பரபரப்பு!
உசிலம்பட்டி சொகுசு விடுதியில் பயங்கர தீவிபத்து: மின்கசிவால் கூட்ட அரங்கம் நாசம், பரபரப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
Embed widget