மேலும் அறிய

திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

செம்பட்டி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு. 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 38). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று  நண்பகல் இவர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் சின்னாளப்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் நேற்று தேவதானப்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.

Online Rummy: ஆன்லைன் ரம்மியால் மீண்டும் சோகம்..! ரூ. 4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி


திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் -  ஒருவர் உயிரிழப்பு,  10 பேர் படுகாயம்

பின்னர் அங்கிருந்து அவர்கள் வத்தலக்குண்டு வழியாக சின்னாளப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். செம்பட்டி அருகே, வத்தலக்குண்டு சாலையில் உள்ள கூலம்பட்டி பிரிவில் வந்தபோது சுற்றுலா வேனும், பிரவீனின் காரும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் நிலை தடுமாறிய சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.  அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய பிரவீன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா வேனில் வந்த சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

வழக்குகளை கையாள பயிற்சி அளிப்பதே முதல் வேலை: விலங்கு வதை வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசு நியமித்த எஸ்பி!
திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் -  ஒருவர் உயிரிழப்பு,  10 பேர் படுகாயம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி  காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உயிரிழந்த பிரவீனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரவீனுக்கு திவ்யா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை.

திண்டுக்கல் மாவட்டம் கே.கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி சிவப்பிரியா. இந்த தம்பதிக்கு யோகேஷ் (வயது 14), கவியரசன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் யோகேஷ், நீலாகன்னிவலசு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  நேற்று முன்தினம் யோகேசுக்கும், அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அண்ணனை, கவியரசன் விளையாட்டாக திட்டியதாக தெரிகிறது.


திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் -  ஒருவர் உயிரிழப்பு,  10 பேர் படுகாயம்

அப்போது அவர்களை பெற்றோர் சமரசம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை எடுத்து யோகேஷ் குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கே.கீரனூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கள்ளிமந்தையம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget