மேலும் அறிய

குழந்தையை கடத்த வந்தவர்..மனநலம் பாதித்தவரை அடித்த மக்கள் - திண்டுக்கல்லில் பரபரப்பு

வேடசந்தூர் அருகே குழந்தையை கடத்த வந்தவர் என்று நினைத்து மனநலம் பாதித்தவரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள். காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள கொம்பேறி பட்டி பகுதியில் இன்று ஒரு நபர் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சுற்றி திரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது. இதனால் அந்த நபரைக் கண்ட பொதுமக்கள் அவர் குழந்தைகளை கடத்த வந்த நபர் என்று நினைத்து அவரைப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சுற்றி வளைத்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.

1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!


குழந்தையை கடத்த வந்தவர்..மனநலம் பாதித்தவரை அடித்த மக்கள் - திண்டுக்கல்லில் பரபரப்பு

ஆனால் பொதுமக்கள் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க மறுத்து போலீசாரிடமும், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆம்புலன்சை மீண்டும் எடுத்துச்சென்றுவிட்டார். பொதுமக்கள் தாக்கியதால் கிறங்கிய அந்த நபரை, மனிதநேயமிக்க பொதுமக்கள் சிலர் மீட்டு தண்ணீர், டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து தேற்றினர். அதனைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக், ராஜலிங்கன், கிருஷ்ணவேனி தலைமையிலான போலீசார் மற்றும் கொம்பேறிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.

DMK - VCK Alliance: நெருங்கும் தேர்தல் - அடம்பிடிக்கும் விசிக - 3 தொகுதிகளை கொடுக்குமா திமுக? இன்று 2ம்கட்ட பேச்சுவார்த்தை


குழந்தையை கடத்த வந்தவர்..மனநலம் பாதித்தவரை அடித்த மக்கள் - திண்டுக்கல்லில் பரபரப்பு

அதன்பின்னர் அந்த நபரை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிகிச்சைக்கு பிறகு அந்த நபரை மனநல காப்பகத்தில் சேர்க்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, குழந்தைகளை கடந்த வந்த நபர் பிடிபட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுபோல் தவறான வதந்திகளை பரப்புவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget