மேலும் அறிய

திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - இதுவரை 4 பேர் கைது

’’நாட்டு துப்பாக்கி வைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களாகவே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை’’

திண்டுக்கல் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் (26) இவர் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிகுளம் என்ற இடத்தில்  நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த போது  அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - இதுவரை 4 பேர் கைது

இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட ராகேஷின் தந்தையான மாணிக்கம் செட்டிகுளம் பகுதியில் மீன் பிடிப்பதற்கான குளத்தை குத்தகைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் எடுத்திருந்ததும் அதில் போட்டி காரணமாக ஏதேனும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் முதற்கட்ட விசாரணையை போலீசார் துவக்கினர்.


திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - இதுவரை 4 பேர் கைது

குத்தகை எடுப்பதில் தகராறு ? - திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

இந்த நிலையில் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக போலிசார் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணமாக போலிசார் கூறுகையில் செட்டிக்குளம் பகுதியில் உள்ள மீன்பிடிப்பதற்கான குளத்தை குத்தகைக்கு எடுக்கும் போட்டியில் நடந்ததாக கூறினர். மேலும் இந்த  சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும்.


திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - இதுவரை 4 பேர் கைது

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் திண்டுக்கல் பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களாகவே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யாரையும் போலிசாரால் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - இதுவரை 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற சம்பவம் கட்டுப்படுத்த இதுவரையில் அதிகமான குற்றவாளிகள் மீது குண்டாஸ் போடப்பட்டு வருகிறது. மேலும் குற்றங்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிர  கண்காணிப்பையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
ABP Premium

வீடியோ

”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Embed widget