கிளி ஜோசியத்துக்கு தடையா? அப்ப எலி ஜோசியம் பாப்போம்..!
எலி ஜோதிடத்திற்கு ரூபாய் 30 முதல் 50 வரை காணிக்கையாக பெறுவதாக எலி ஜோதிடர் முருகேசன் கூறுகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் எலியுடன் ஒருவர் ஜோதிடம் பார்த்து வந்தார். அவரிடம் எலி ஜோதிடம் பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவு கூடுகின்றனர்.
கிளி ஜோதிடம் என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் இந்திய சிங்கப்பூரர்களால் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள ஒரு வகை ஜோதிடமாகும். கார்டுகளை எடுக்க பயிற்சியளிக்கப்பட்ட ரோஜா வளையம் மற்றும் அலெக்ஸாண்ட்ரைன் கிளிகளைப் பயன்படுத்துவது இதில் அடங்கும்.
ஒரு கிளி ஜோதிடர் பொதுவாக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழைப்பதற்காக அல்லது மக்கள் கூடும் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருப்பார். பயிற்சி பெற்ற ஒன்று அல்லது இரண்டு கிளிகளைக் கொண்ட ஒரு கூண்டு அவரிடம் இருக்கும். அட்டைகள் அவருக்கு முன்னால் விரிந்து அல்லது அடுக்கி வைக்கப்பட்டும், அவை இந்திய அண்ட அமைப்பைக் குறிக்கும் எண்ணிக்கையில் 27 ஆகும். ஒவ்வொரு அட்டையிலும் இந்து தெய்வத்தின் உருவமும் சில அட்டைகளில் புத்தர் அல்லது கன்னி மேரி குழந்தை இயேசுவின் உருவங்களும் உள்ளன.
ஒருவர் ஜோசியம் சொல்பவரின் முன் அமர்ந்தால், பின்னவர் கூண்டைத் திறந்து கிளியை வெளியே விடுவார். ஒருவருக்கு ஒரு அட்டையை எடுக்க அவர் கிளிக்கு அறிவுறுத்துகிறார். கிளி அட்டைகளை நோக்கிச் சென்று, அடுக்கிலோ அல்லது விரிக்கப்பட்ட இடத்திலோ ஒன்றைத் எடுத்து ஜோதிடரிடம் கொடுக்கிறது. அதன் பிறகு மீண்டும் தன் கூண்டுக்குள் செல்கிறது. ஜோதிடர் அட்டையைத் திறந்து, படத்தின் அடிப்படையில் ஜோதிடம் கூறுவார்.
இப்படி இது வரையில் இருந்த கிளி ஜோதிடத்திற்கு மாற்றாக தென்காசியை சேர்ந்த முருகேசன் (55) என்பவர், கடந்த பல ஆண்டுகளாக கிளியை வைத்து ஜோதிடம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளியை வைத்து ஜோதிடம் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக கிளி ஜோதிடம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கிளி ஜோதிடத்திற்கு பதிலாக எலி ஜோதிடம் பார்த்து வருகின்றனர். வீட்டில் வளரும் எலியை பிடித்து அதற்கு குறி சொல்லும் சீட்டு எடுத்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் எலி ஜோதிடம் பார்த்து வருகின்றனர். கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் எலி, ஜோதிடர் முருகேசன் கூறுவதைக் கேட்டு ஜோதிடம் பார்க்கு நபரின் பெயரைச் சொல்லி, அவர் பெயருக்கு ஒரு சீட்டு எடுத்துக் கொடு! என்றவுடன் ஜோதிடர் முன்பாக குவித்து வைக்கப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்து ஜோதிடர் முருகேசன் கையில் எலி கொடுக்கிறது. பின்னர், அவர் அந்த நபரின் நிலை குறித்து, எதிர்காலம் குறித்து ஜோதிடம் சொல்கிறார்.
இதனை பார்ப்பவர்கள் மிகுந்த ஆர்வமாக அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேடிக்கை பார்த்து வருவதுடன், எலி ஜோதிடம் பார்க்க குவிந்து வருகின்றனர். எலி ஜோதிடம் கூறுவது போல் சிலருக்கு நல்லது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தான் வளர்த்து வரும் எலிக்கு கேரட், சாப்பாடு, இட்லி உள்ளிட்ட உணவுகளை கொடுத்து வருகிறார். எலி ஜோதிடத்திற்கு ரூபாய் 30 முதல் 50 வரை காணிக்கையாக பெறுவதாக முருகேசன் கூறுகிறார். தற்போது நிலக்கோட்டை மற்றும் அணைப்பட்டி பகுதியில் எலி ஜோதிடம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

