மேலும் அறிய

பொய் மூட்டையை கர்நாடக துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கே வந்து தைரியமாக கூறுகிறார் - ஆர்.பி.உதயகுமார் !

மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு அதிக பலன் என்று கூட்டணி தர்மம் என்ற பெயரில் முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும்,வாரிசு அமைச்சரும் வாய் மூடி மௌனியா இருக்கலாமா?

தமிழகத்திற்கு ஜெட் வேகத்தில் துரோகம் நடைபெற்று வருகிறது, இன்றைக்கு ஜீவாதார பிரச்னை எல்லாம் அடமானம் ஆகி வருகிறது, அதைப் பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை என்றார்
 
 ஆர்.பி.உதயகுமார்
 
மதுரை பாலமேடு பேரூராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது...,” முல்லைப் பெரியார் பிரச்னையில் அம்மாவின் ஆட்சியில் 2014-ம் ஆண்டு மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் அணை பாதுகாப்பாக உள்ளது. இன்று பல்வேறு வல்லுநர்கள் உச்சநீதிமன்றத்தில் வழங்கினர்.
 
அதனைத் தொடர்ந்து மாபெரும் தீர்ப்பை தமிழகத்திற்கு அம்மா பெற்று தந்தார். தற்பொழுது அணை பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி ஆகிவிட்டது. மத்திய நீர்வளத் துறை ஆணையம் ஆணைக்குறித்து மறு ஆய்வு செய்ய 12 மாதம் அவகாசம் அளித்துள்ளது, இந்நேரம் தமிழக முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் கொதித்து எழுந்திருக்க வேண்டாமா? முதலமைச்சர் அமெரிக்காவில் கோர்ட் சூட் மாட்டிக் கொண்டு போட்டோசூட் நடத்துகிறார். அமைச்சர் துரைமுருகனோ சிங்கப்பூர் சென்றுவிட்டார், வாரிசு அமைச்சர் உதயநிதியோ வாய் திறக்கவில்லை,?
 
மேகதாது குறித்து வழக்கு உள்ளது
 
அது மட்டுமல்லாது இன்றைக்கு கர்நாடக துணை முதலமைச்சர் தமிழகத்திற்கு வந்திருந்தார், வாரிசு அமைச்சர் உதயநிதியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள குறுஞ்சி இல்லத்தில் பார்த்துவிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பலன் என்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார், அணை கட்டினால் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும். ஏற்கனவே காவிரி உரிமை குறித்து விவசாயிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தனர், ஏற்கனவே கர்நாடகாவில் கூறியதற்கு விவசாயிகள் மனம் வேதனை அடைந்தனர்,தற்போது தமிழ்நாட்டுக்கே வந்து கர்நாடக துணை முதலமைச்சர் கூறுகிறார், ஏற்கனவே மேகதாது குறித்து வழக்கு உள்ளது.
 
ஜீவாதார பிரச்னை எல்லாம் அடமானம் வைக்கப்படுகிறது
 
 இதே காவேரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் அவையை முடக்கி காவேரி ஒழுங்காற்று குழுவை எடப்பாடியார் அமைத்தார் ,ஆனால் இன்றைக்கு மேகதாது அணைக்குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு முதலமைச்சரும்,துறை அமைச்சரும், வாரிசு அமைச்சரும் வாய் திறக்கவில்லை, கூட்டணி தர்மத்திற்காக வாய் போட்டு சட்டம் போட்டு விட்டதா? இன்றைக்கு தமிழகத்திற்கு ஜெட் வேகத்தில் துரோகம் நடைபெற்று வருகிறது, இன்றைக்கு ஜீவாதார பிரச்னை எல்லாம் அடமானம் ஆகி வருகிறது. அதைப் பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. மதுரை மாவட்டத்திற்கு ஜல்லிக்கட்டு அரங்கம், நூலகைத் தவிர வேறு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை  ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு மின்சார கட்டணத்தை கூட சரியாக கட்டவில்லை என்று செய்திகள் வருகிறது, இன்றைக்கு பக்கத்து மாநிலமான கர்நாடகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை இதைக் கண்டு தமிழக அரசு பொங்கி எழ வேண்டாமா? உங்களால் மத்திய அரசிடம் நிதியை பெற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்,  எடப்பாடியாரிடம் ஒப்படையுங்கள்  மத்திய அரசின் நிதியை பெற்று தருவார் என பேசினர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget