மேலும் அறிய

கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்

இந்து அறநிலைத்துறையிடம் உள்ள கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் என கம்பத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி.

தேனி மாவட்டம் கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி நடந்து கொண்டிருப்பதால், அதை இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பார்வையிட்டு செயல் அலுவலரிடம் கோவில் சம்பந்தமான பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.


கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும்  - அர்ஜுன் சம்பத்

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசுகையில், “கம்பம் கம்பராய பெருமாள், காசி விசுவநாதர் ஆலயம் மற்றும் இந்துக் கோயில்களில் உள்ள சொத்துக்கள் தனியாரின் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளதாகவும், கோயிலில் வரும் வருவாயை கோயிலுக்கான திருப்பணிகள் செய்யாமல் அதை விடுத்து இங்கே கோயில் வருவாய் முழுக்க அறநிலையத்துறையுடைய கணக்கிலே சென்று விடுகிறது. செய்யக்கூடிய திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலமாகத்தான் திருப்பணியில் செய்யப்படுகிறது. உபயதாரர்கள் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயிலில் பணிகள் செய்ய வேண்டும் என்றால் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். 


கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும்  - அர்ஜுன் சம்பத்
அதே நேரத்தில் சர்ச்சுகள் மசூதிகளில் பழமை வாய்ந்தவைகளை புதுப்பிப்பதற்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்குகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். இந்தக் கோயில்களில் திருப்பணியானது அரசு நிதியிலிருந்து செய்யப்பட வேண்டும். கோயில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். இது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை இந்து அறநிலையத்துறை அமைச்சரிடத்திலும் முதல்வர் இடத்திலும் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார். மேலும், ”இப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் மக்களை அனுமதிக்கின்றனர். அந்த நிலைமை மாறி மாதந்தோறும் பௌர்ணமி நாளில் கண்ணகி கோவிலில் வழிபாடு செய்திட  வகையிலே அந்த கோவிலுக்கு நம்முடைய வழிபாட்டுரிமை மீட்டுக் கொடுக்க வேண்டும். இது தமிழக அரசாங்கத்தினுடைய கடமை .


கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும்  - அர்ஜுன் சம்பத்

நாடாளுமன்றத்திலே முதல் முதலாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு ராகுல் அவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் இந்துக்கள் என்பவர்கள் பிஜேபியை சார்ந்தவர்கள், இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள், ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவர்கள், இந்துக்கள் அல்ல என்று ராகுல் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் மற்றும் இந்திய கூட்டணியில் இருந்து கொண்டு எழுதிக் கொடுத்ததை ராகுல் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்துக்கள் சமூக வலைதளங்களில் எந்த பதிவு போட்டாலும் திராவிட மாடல் அரசு பொய் வழக்கு போட்டு இந்துக்களை சிறையில் அடைகின்றனர். இதை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்து அறநிலை துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர். இதனால் அவர்களை மாற்றி இந்துக் கோயில்கள் அனைத்தையும் அறங்காவலரிடம் ஒப்படைத்து அவர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Breaking News LIVE: திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
'கத்தில குத்திட்டாங்க சார்' கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Rajasthan BJP Minister: சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி, பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Embed widget