அக்னிபத் விவகாரம்: சு.வெங்கடேசன் மீது திலகர் திடல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 458 பேர் மீது திலகர் திடல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

அக்னிபத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டம், இளைஞர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்கான செலவு குறைக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது.
அக்னிபத் திட்டத்தினை கைவிடவும், தனியார் ரயில் இயக்கும் முடிவினை ரத்து செய்யவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று மதுரையில் நடைபெற்ற இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் … #Agnipath #Railway #Private #Agniveer pic.twitter.com/QsnCMn4bi3
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 23, 2022

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது. ஆயுதப் படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்னிபாத் எதிர்ப்பு தொடர்பாக போராட்டம் நடத்தியதாக சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















