Sattur: சட்டவிரோதமான பட்டாசு தயாரிப்பு.. வெடித்து சிதறிய பட்டாசுகடைகள்.. பரிதாபமாய் பறிபோன உயிர்கள்..!
மேலும் பட்டாசு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமானது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் என பல இடங்களில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் தொழிற்சாலைகளில் சில இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடல்சிதறி உயிரிழப்பு:
இந்நிலையில் சாத்தூர் அருகே பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து ஏற்பட்டதில் கோட்டைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து ஏற்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.#சாத்தூர் | #viruthunagar pic.twitter.com/4TBbubm5T1
— arunchinna (@arunreporter92) May 17, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















