மேலும் அறிய

”அதிமுக போராட்டத்திற்கு பயந்துதான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு” - செல்லூர் கே.ராஜூ

தனி மனிதர், ஒரு குடும்பம் என இல்லாமல் அதிமுக ஜனநாயக வழியில் இயங்கும் கட்சி, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரமாண்டமான மாநாடு நடத்த ஆலோசனை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக் கட்டியுள்ளது. புத்தாண்டு பிறந்துவிட்டதை மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.  கடற்கரை, பூங்காக்கள் என சுற்றுலா தளங்களில் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு  முதல் புத்தாண்டை விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உலக பிரசித்தி பெற்ற மதுரையின் மீனாட்சி அம்மன் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் பின்னர் அ.தி.மு.க.,வினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

”அதிமுக போராட்டத்திற்கு பயந்துதான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு” - செல்லூர் கே.ராஜூ
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,”உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளேன். அ.தி.மு.க.,வுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். அ.தி.மு.க., ஆட்சியில் விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். 2022ல் தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக  உள்ளது” என்றார்.
 
மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அ.தி.மு.க., அலுவலகத்திற்கு அனுப்பபட்ட கடிதம் திருப்பி அனுப்பபட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்தார்.

”அதிமுக போராட்டத்திற்கு பயந்துதான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு” - செல்லூர் கே.ராஜூ
 
இந்த ஆண்டு அதிமுகவிற்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு :
 
அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளோம். தனி மனிதர், தனி குடும்பம் என்பது இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாட்சியாக அ.தி.மு.க., செயல்படுகிறது. வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும். புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும். தி.மு.க., அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் வழங்குவார்கள் என கூறினார். இதுவரை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு மகளிர்களுக்கும் தி.மு.க., அரசு 22ஆயிரம் கொடுத்திருக்கனும் ஆனால் கொடுக்கவில்லை.

”அதிமுக போராட்டத்திற்கு பயந்துதான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு” - செல்லூர் கே.ராஜூ
இப்போது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டத்திற்கு பயந்து தான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்துள்ளது. 33ரூபாய்க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் என தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு வழங்கப்படுகிறது  என கடையில் எழுதி வைக்க வேண்டும், திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது" என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget