மேலும் அறிய

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

சென்னையில் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்சி ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் அருகே அமைந்துள்ளது நந்தம்பாக்கம். இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இதனால், தனது அத்தை வீட்டில் வளர்ந்து வருகிறார்.

கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற சிறுமி:

அத்தை வீட்டிலே வளர்ந்து வரும் அந்த சிறுமியை அவரது அத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த அந்த சிறுமி வீட்டை விட்டு யாரிடம் சொல்லாமல் வெளியேறியுள்ளார். கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற வீ்டிற்கு திரும்பாத நிலையில், அவரது அத்தை நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, நந்தம்பாக்கம் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது, சிறுமி பம்மலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் பம்மலில் சோதனை மேற்கொண்டதில் பம்மலில் மீட்டுள்ளனர்.  போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை:

போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமி சாலையோரம் நின்று கொண்டிருந்த கால்டாக்சி ஓட்டுனர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ஆவார். 38 வயதான பாக்கியராஜ் அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அவரின் வார்த்தையை அந்த சிறுமி நம்பியுள்ளார். பின்னர், தனது நண்பரும், மற்றொரு ஓட்டுனருமான பரமசிவன் என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற இருவரும் சிறுமிக்கு வேலை வாங்கித் தராமல், காரிலே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், தங்கள் காரில் இருந்து பம்மலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சிறுமி கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், 17 வயது சிறுமியை காரில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர்கள் பாக்கியராஜ் மற்றும் பரமசிவன் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையிலே வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமியை, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Embed widget