மேலும் அறிய

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

சென்னையில் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்சி ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் அருகே அமைந்துள்ளது நந்தம்பாக்கம். இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இதனால், தனது அத்தை வீட்டில் வளர்ந்து வருகிறார்.

கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற சிறுமி:

அத்தை வீட்டிலே வளர்ந்து வரும் அந்த சிறுமியை அவரது அத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த அந்த சிறுமி வீட்டை விட்டு யாரிடம் சொல்லாமல் வெளியேறியுள்ளார். கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற வீ்டிற்கு திரும்பாத நிலையில், அவரது அத்தை நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, நந்தம்பாக்கம் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது, சிறுமி பம்மலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் பம்மலில் சோதனை மேற்கொண்டதில் பம்மலில் மீட்டுள்ளனர்.  போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை:

போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமி சாலையோரம் நின்று கொண்டிருந்த கால்டாக்சி ஓட்டுனர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ஆவார். 38 வயதான பாக்கியராஜ் அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அவரின் வார்த்தையை அந்த சிறுமி நம்பியுள்ளார். பின்னர், தனது நண்பரும், மற்றொரு ஓட்டுனருமான பரமசிவன் என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற இருவரும் சிறுமிக்கு வேலை வாங்கித் தராமல், காரிலே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், தங்கள் காரில் இருந்து பம்மலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சிறுமி கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், 17 வயது சிறுமியை காரில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர்கள் பாக்கியராஜ் மற்றும் பரமசிவன் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையிலே வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமியை, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Embed widget