![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கயாவில் தை அமாவாசை பித்ரு பூஜைக்கு சுற்றுலா சிறப்பு ரயில்!
ஷீரடி சுற்றுலா சிறப்பு ரயிலில் உணவு தங்குமிடம் உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 7,060 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
![கயாவில் தை அமாவாசை பித்ரு பூஜைக்கு சுற்றுலா சிறப்பு ரயில்! A special train will be operated from Madurai for the benefit of tourists கயாவில் தை அமாவாசை பித்ரு பூஜைக்கு சுற்றுலா சிறப்பு ரயில்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/f5bf2b6440ba64fb26e32aca63bdfc1d_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று பித்ரு பூஜை செய்ய மதுரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக கயா சென்று சேரும். வழியில் கொல்கத்தாவில் உள்ளூர் சுற்றுலா, காளி தேவி, காமாக்யா தேவி, காசி விசாலாட்சி, கயாவில் உள்ள மங்கள கௌரி, அலகாபாத்தில் உள்ள அலோபிதேவி பூரியிலுள்ள பிமலாதேவி போன்ற 5 சக்தி பீடங்களையும், திரிவேணி சங்கமம், கொனார்க் சூரியநாதர் கோவில் மற்றும் அருகிலுள்ள ஆலயங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து கடைசியாக விஷ்ணு பாதத்தை தரிசித்து மதுரை திரும்பும்படி 13 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#Abpnadu #railway #south #madurairailway
— Arunchinna (@iamarunchinna) December 20, 2021
கயாவில் தை அமாவாசை பித்ரு பூஜைக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் கட்டணம், உணவு, உள்ளூர் போக்குவரத்து, தங்குமிட கட்டணம், பயண காப்பீடு உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 12,885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவுக்கான பயணச்சீட்டுகளை www.irctctourism.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது மதுரை அலுவலக எண் 8287931977 ஐ தொடர்பு கொள்ளலாம். இரண்டு தடுப்பு ஊசிகள் செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலாவில் அனுமதிக்கப்படுவர்.
ஷீரடி சுற்றுலா ரயில்
சீரடி, பண்டரிபுரம், மந்திராலயம், சனி சிங்னாப்பூர் பாரத தரிசன சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து வருகிற டிசம்பர் 24 அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக சென்று ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், மந்த்ராலயம் ராகவேந்திரர், சனி சிங்னாபூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயங்கள் ஆகியவற்றை தரிசித்து திரும்பும்படி ஏழு நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் கட்டணம், உள்ளூர் பேருந்து, உணவு தங்குமிடம் உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 7,060 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)