மேலும் அறிய

Madaurai: கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான்  நடுகல்  சிற்பம் கண்டுபிடிப்பு!

அலங்காநல்லூர்  அருகே தனியார் நிலப் பகுதியில் 600  ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல்  சிற்பம் கண்டறியப்பட்டது.

வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களை தியாகிகளாக போற்றிய பண்பாடாக தமிழர் பண்பாடு உள்ளது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'  என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர்.

நடுகல் வழிபாடு:

இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு.  இந்நிலையில் அலங்காநல்லூர்  அருகே தனியார் நிலப் பகுதியில் 600  ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல்  சிற்பம் கண்டறியப்பட்டது.


Madaurai: கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான்  நடுகல்  சிற்பம் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர், எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, அவர்களின் ஆலோசனைப்படி, முதல்வர் அப்துல் காதிர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரலாற்றுத்துறை தலைவர் மணிமேகலை, பேராசிரியை இருளாயி, மாணவர் கல்லாணை   ஆகியோர்  வெள்ளையன் பட்டி இருந்து முடுவார்பட்டி செல்லும் வழியில் தனியார் விவசாய பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கிபி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் நடுகல்  கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வரலாற்றுத்துறை தலைவர் மணிமேகலை கூறியதாவது 

இன்றைய தமிழ் சமூகத்தில்  வேளாண்மை முக்கியத் தொழிலாக இருக்கிறது.  பரந்துவிரிந்த காணப்பட்ட காடுகளை அழித்து விவசாயம் செய்ய உகந்த  நிலமாக மாற்றினார்கள். குறிப்பாக அலங்காநல்லூர் பகுதியில் விவசாயம் தொழில் அதிக முக்கியத்துவம் பெற்று காணப்படுகிறது. பன்றிக் குத்திப்பட்டான் கல் என்பது, அக்காலத்தில் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து  காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதப்படுத்தி வந்தது அக்காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாயத்தையும்  பாதுகாக்க ஒரு போர் வீரனை நியமிப்பார்கள்.

அவ்வீரன் ஊருக்கு துன்பம் விளைவித்து வந்த காட்டுப்பன்றியை அழிக்கும் நோக்குடன், வீரன் போராடும் போது அப்பன்றியும், வீரனும் இறந்திருக்கக்கூடும். அவ்வீரன் வீரத்தை போற்றும் வகையில் நடுகல் எடுக்கும் வழக்கம் உண்டு. பன்றி தாக்கி இறந்தால், பன்றிக் குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது.


Madaurai: கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான்  நடுகல்  சிற்பம் கண்டுபிடிப்பு!

பன்றிக் குத்திப்பட்டான் கல்

இவ்வாறு கண்டறியப்பட்ட நடுகல்  3 அடி உயரமும் 1 ½ அடி அகலம் கொண்டவை. இவ்வீரனின் தலை மீது கொண்டையும், காதில் குண்டலங்களும், இடுப்பிற்கு கீழ் ஆடை அணிந்து உள்ளான். காதுகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அணிந்துள்ளனர். கரங்களில் மேலிருந்து கீழாக இரண்டு இடங்களில் பூணூலாக அணிந்துள்ளார். இடையில் சிறு குறு வாளுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றியை தனது நீண்ட வேல்கம்பு   பன்றியின் மார்பில் குத்துவது போல் உள்ளது. 


Madaurai: கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான்  நடுகல்  சிற்பம் கண்டுபிடிப்பு!

வேட்டை நாய் சிற்பம்

  பன்றி குத்தப்பட்டான் நடுகல் வீரன் சேர்ந்து வேட்டை நாய் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை வேட்டைநாய் பன்றியோடு போராடி உயிர் பிரிந்து இருக்கலாம் . அதனால் தான் வீரன் மற்றும் வேட்டை நாயின்  வீரத்தை பறைசாற்றும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை வடிவமைப்பு பொறுத்தமட்டில் கிட்டதட்ட 600 ஆண்டு பழமையான சிற்பமாக  கருதலாம். தற்போது இவ்வூரில் வாழும் மக்கள்  குலதெய்வங்களாக இந்த சிற்பங்களை வணங்கி வருகின்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர் மாறுவதால் அறிவிப்புகள் பின்வாங்கப்படுமா?- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
Embed widget