மேலும் அறிய

மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

அரசு விதிமுறைகளை முறையாக கற்றுத் தந்து அரசு கட்டண செலவில் உரிமம் அளித்தது மகிழ்ச்சி என உரிமம் பெற்றவர்கள் பேட்டி

காஞ்சிபுரத்தில் புதிய முன்னெடுப்பாக 43 பழங்குடியின மற்றும் நரிக்குறவர் என மக்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் பழங்குடியின மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி மற்றும் நரிக்குறவர் இன மக்கள் தங்களது தொழில் நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலையில் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற தனியார் பயிற்சி பள்ளிகளை நாடும் நிலையில் கூடுதல் கட்டணம் கேட்பதால் அவர்கள் அதனை புறக்கணித்துவிட்டு காவல்துறையிடம் அவ்வப்போது சிக்கி அபராதம் செலுத்தி வருகின்றனர். 


மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

இந்நிலையை போக்க காஞ்சிபுரம் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தர காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்தை அணுகி உள்ளனர். 

ஓட்டுநர் பயிற்சி வகுப்பு

இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் நபர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, போக்குவரத்து விதிமுறைகளை 2 மணி நேரம் பயிற்சி வகுப்பாக எடுத்து அவர்களுக்கு பழகுநர் உரிமம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஓட்டுநர் உரிமம் 43 நபர்களுக்கு வழங்கிட இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இரட்டிப்பு மகிழ்ச்சி

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு இருசக்கர வாகன உரிமத்தை அளித்தார். இதைப் பெற்றுக் கொண்ட வாகன ஓட்டுநர்கள்  அரசு கட்டண செலவிலேயே உரிமம் தங்களுக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி என தெரிவித்தனர். மேலும் அரசு போக்குவரத்து விதிகளை கற்றுக் கொண்டதால் வாகன விபத்து இன்றி பயணம் செய்வோம் என தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம், மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பயன் அடைந்தவர்கள் கூறுவதென்ன ?

இதுகுறித்து ஓட்டுநர் உரிமம் பெற்ற மானாமதி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கூறுகையில், ஆசையாக பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு வாங்கிய வாகனங்களை இயக்கினால், ஓட்டுநர் உரிமம் இல்லாததால் காவல்துறையினர் அபராதம் விதிப்பது தொடர் கதையாக மாறி உள்ளது. 


மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என, ஓட்டுநர் பயிற்சி பள்ளியை அணுகினால் அதிக அளவு செலவாகிறது. தனியாக சென்று எங்களுக்கு ஓட்டுநர் உரிமம் கேட்பதற்கும் தயக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் அமைப்பு சார்பில் எங்கள் தொடர்பு கொண்டு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் இலவசமாக, போக்குவரத்து விதிகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். தொடர்ந்து முறையாக எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது எங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.


மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

இதுகுறித்து ஆம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் கூறுகையில், ஓட்டுனர் உரிமம் பெறுவது எங்களுக்கு சிரமமான ஒன்றாக இருந்து வந்தது. உடனடியாக இதுகுறித்து அமைப்பு மூலம் போக்குவரத்து ஆய்வாளரை அணுகிய போது இலவசமாக எங்களுக்கு அனைத்து பயிற்சிகளையும் அளித்தார். உடனடியாக லைசன்ஸ் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இதற்காக முன்னேற்பாடுகளை செய்த அமைப்பிற்கும் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget