மேலும் அறிய

நர்ஸை தகாத இடத்தில் தொட்ட பேஷண்ட்.. மேற்குவங்கத்தில் மீண்டும் ஷாக்.. இதுக்கு தீர்வே இல்லையா?

மேற்குவங்கத்தில் சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியில் இருந்தபோது, நோயாளி ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் ஏற்கனவே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதே மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மேற்குவங்கத்தை உலுக்கும் சம்பவங்கள்: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை முன்வைத்து மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்கத்தில் செவிலியர் ஒருவரை நோயாளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியுள்ளார்.

நேற்று இரவு, பிர்பூமில் உள்ள இளம்பஜார் சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியில் இருந்தபோது, நோயாளி ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கையில், அவர் செவிலியரை தகாத இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இருந்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்த செவிலியர், "நான் மருத்துவரின் அறிவுறுத்தலை பின்பற்றிக்கொண்டிருந்தபோது, ​​ஆண் நோயாளி என்னிடம் தவறாக நடந்துகொண்டு, என்னுடைய அந்தரங்க உறுப்புகளில் தகாத முறையில் என்னைத் தொட்டார். மேலும், தகாத வார்த்தைகளை சொல்லி திட்டினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: பாதுகாப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு நோயாளி தன் குடும்பத்தினர் முன்னிலையில் பணியில் இருக்கும் ஒருவரிடம் இப்படி செய்ய எப்படி துணிவு வரும்?" என்றார்.

இந்த சம்பவத்தால் சுகாதார நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், காவல்துறை அதிகாரிகளை மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நோயாளியை கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் சேக்ரட் ஹார்ட் பள்ளி அருகே இரண்டு பெண்களை சில ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். கொல்கத்தா சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே உத்தரகாண்ட் சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருந்தது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget