மேலும் அறிய

நர்ஸை தகாத இடத்தில் தொட்ட பேஷண்ட்.. மேற்குவங்கத்தில் மீண்டும் ஷாக்.. இதுக்கு தீர்வே இல்லையா?

மேற்குவங்கத்தில் சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியில் இருந்தபோது, நோயாளி ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் ஏற்கனவே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதே மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மேற்குவங்கத்தை உலுக்கும் சம்பவங்கள்: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை முன்வைத்து மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்கத்தில் செவிலியர் ஒருவரை நோயாளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியுள்ளார்.

நேற்று இரவு, பிர்பூமில் உள்ள இளம்பஜார் சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியில் இருந்தபோது, நோயாளி ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கையில், அவர் செவிலியரை தகாத இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இருந்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்த செவிலியர், "நான் மருத்துவரின் அறிவுறுத்தலை பின்பற்றிக்கொண்டிருந்தபோது, ​​ஆண் நோயாளி என்னிடம் தவறாக நடந்துகொண்டு, என்னுடைய அந்தரங்க உறுப்புகளில் தகாத முறையில் என்னைத் தொட்டார். மேலும், தகாத வார்த்தைகளை சொல்லி திட்டினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: பாதுகாப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு நோயாளி தன் குடும்பத்தினர் முன்னிலையில் பணியில் இருக்கும் ஒருவரிடம் இப்படி செய்ய எப்படி துணிவு வரும்?" என்றார்.

இந்த சம்பவத்தால் சுகாதார நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், காவல்துறை அதிகாரிகளை மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நோயாளியை கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் சேக்ரட் ஹார்ட் பள்ளி அருகே இரண்டு பெண்களை சில ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். கொல்கத்தா சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே உத்தரகாண்ட் சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருந்தது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget