மேலும் அறிய

பெகசஸ் விவகாரம் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு - மேற்குவங்க அரசு

பெகசஸ் உளவு தொழில்நுட்பம் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் மேற்குவங்க அரசு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக உலகின் மிகவும் பிரபலமான பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட பத்திரிகைகள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. மேலும், உளவு பார்க்கப்பட்டோரின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் பெயர்கள், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி உள்பட பலரது பெயர்களும் இடம்பெற்றிருந்தது. நாடாளுமன்ற மழைக்கால தொடர் தொடங்குவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு வெளியான இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பூதாகரத்தை கிளப்பி வருகிறது.

பெகசஸ் தொழில்நுட்பத்தை சரிபார்க்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே பகிர்ந்து கொள்வோம் என்று அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்தது. இதனால், இந்தியர்களை மத்திய அரசு உளவு பார்த்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், பெகசஸ் தொழில்நுட்பம் பற்றி இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்டதை முதன்முதலில், டுவிட்டரில் வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன்சுவாமி, இந்தியர்களை உளவு பார்க்க என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்கு பணம் செலுத்தியது யார்? மத்திய அரசு உளவுபார்க்கவில்லை என்றால் உளவு பார்க்க பணம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார்.


பெகசஸ் விவகாரம் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு - மேற்குவங்க அரசு

பல தரப்பினரும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், மத்திய அரசு பெகசஸ் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய அளவில் மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் கடுமையாக எதிர்த்து வருபவர் மம்தாபானர்ஜி. மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் பெகசஸ் விவகாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தீவிரமாக கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பெகசஸ் உளவு தொழில்நுட்பம் மூலம் தலைவர்களின் செயலிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில் மேற்கு வங்க அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

பெகசஸ் விவகாரம் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு - மேற்குவங்க அரசு

சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க மம்தாபானர்ஜி டெல்லி சென்றுள்ள சூழலில், பெகசஸ் உளவு தொழில்நுட்பம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1953-ஆம் ஆண்டு மதன் பி லோகுர் கடந்த 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget