மேலும் அறிய

விஜயவாடாவில் பிரமாண்டமாக நிற்கும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை.. இன்றுமுதல் மக்களின் பார்வைக்கு..!

விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு நேற்று விஜயவாடாவில் திறக்கப்பட்டது.  இந்த உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

உயரம் 206 அடி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. அம்பேத்கர் சிலை அமைக்கப்படுவதற்கான இத்திட்டம் மொத்தம் ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 400 மில்லியன் டன் எஃகு மற்றும் 120 மில்லியன் டன் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் உயரமான சிலையான சர்தார் படேலின் சிலையை கட்டிய சிற்பி ராம் சுதாரால் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. 

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்றும், அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், வாகனம் நிறுத்துமிடம், உணவு விடுதி உள்ளிட்ட பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை காண்பிக்க எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2,000 இருக்கைகள் கொண்ட ஒரு அரங்கமும், உணவு விடுதியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலையை திறந்து வைத்து பேசிய அவர், “விஜயவாடாவில் இன்று நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சாதிய வரலாற்றை மாற்றிய ஒரு அழியாத சமூக சீர்திருத்தவாதியின் சிலையை நாங்கள் திறந்து வைக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் தீண்டாமை மற்றும் ஆதிக்க சித்தாந்தத்திற்கு எதிராகக் கிளர்த்தெழுந்தார். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வியை கொண்டு சென்றார்” என்று தெரிவித்தார். 

இந்தநிலையில், நேற்று ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்த இந்த அம்பேத்கர் சிலை, இன்று முதல் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் ( ட்விட்டர்) பக்கத்தில் எழுதியபோது, “விஜயவாடாவில் எங்கள் அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கரின் 206 அடி உயரம் கொண்ட இந்த சிலை மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கும் ஒரு சின்னம்” என்று தெரிவித்தார். 

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அம்பேத்கரின் இரண்டாவது மிக உயரமான சில அமைந்துள்ளது. இது 175 அடி உயரம் கொண்டதாகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget