மேலும் அறிய

விஜயவாடாவில் பிரமாண்டமாக நிற்கும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை.. இன்றுமுதல் மக்களின் பார்வைக்கு..!

விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு நேற்று விஜயவாடாவில் திறக்கப்பட்டது.  இந்த உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

உயரம் 206 அடி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. அம்பேத்கர் சிலை அமைக்கப்படுவதற்கான இத்திட்டம் மொத்தம் ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 400 மில்லியன் டன் எஃகு மற்றும் 120 மில்லியன் டன் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் உயரமான சிலையான சர்தார் படேலின் சிலையை கட்டிய சிற்பி ராம் சுதாரால் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. 

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்றும், அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், வாகனம் நிறுத்துமிடம், உணவு விடுதி உள்ளிட்ட பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை காண்பிக்க எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2,000 இருக்கைகள் கொண்ட ஒரு அரங்கமும், உணவு விடுதியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலையை திறந்து வைத்து பேசிய அவர், “விஜயவாடாவில் இன்று நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சாதிய வரலாற்றை மாற்றிய ஒரு அழியாத சமூக சீர்திருத்தவாதியின் சிலையை நாங்கள் திறந்து வைக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் தீண்டாமை மற்றும் ஆதிக்க சித்தாந்தத்திற்கு எதிராகக் கிளர்த்தெழுந்தார். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வியை கொண்டு சென்றார்” என்று தெரிவித்தார். 

இந்தநிலையில், நேற்று ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்த இந்த அம்பேத்கர் சிலை, இன்று முதல் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் ( ட்விட்டர்) பக்கத்தில் எழுதியபோது, “விஜயவாடாவில் எங்கள் அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கரின் 206 அடி உயரம் கொண்ட இந்த சிலை மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கும் ஒரு சின்னம்” என்று தெரிவித்தார். 

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அம்பேத்கரின் இரண்டாவது மிக உயரமான சில அமைந்துள்ளது. இது 175 அடி உயரம் கொண்டதாகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget