மேலும் அறிய

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார்.

உலக அளவில் தடுப்பூசி உற்பத்தியின் தலைநகரமாக இந்தியாவை மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசியது நினைவிருக்கலாம். இதைப்போல, உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக ஐதராபாத்தையும் கூறலாம். பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார். (இந்தியாவில் முதலில் அனுமதி அளிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில், உள்நாட்டுத் தயாரிப்பு கோவாக்சின் தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்பான இதை, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், உற்பத்திசெய்வதே தெரிந்ததே.)

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!

தகவல்தொழில்நுட்ப மாவட்டமான சைபராபாத்தில் கோவிட் சிகிச்சை மையத்தை புதனன்று தொடங்கிவைத்த அவர், “ உலகத்தின் தடுப்பூசி உற்பத்திக் கேந்திரமாக ஐதராபாத் இருக்கின்றபோதும், உள்ளூர் மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் நம்மிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.” என்றார் அமைச்சர் ராமராவ்.  மேலும், “நமக்கு போதுமான தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு நம்முடைய அரசாங்கம் பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்தமுடியும். ஒட்டுமொத்த மாநிலத்திலும் 45 நாள்களுக்குள் தடுப்பூசியைச் செலுத்தும் பணியை முடித்துவிடமுடியும். நம்முடைய தேவை அதிகமாக இருக்கிறது; நமக்கு தரப்படும் தடுப்பூசிகளின் அளவோ மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லாம் மத்திய அரசு செய்வதுதான்.” என்றும் கூறினார், ராமாராவ்.

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!
முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனான இவர்தான். தடுப்பூசி கொள்முதலுக்கான பணிக்குழுவின் பொறுப்பாளரும் ஆவார். ” உலகின் சில நாடுகளில் குறிப்பாக, கனடா, அமெரிக்கா, டென்மார்க் ஆகியவற்றில் தடுப்பூசிகள் தேவைக்கும் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். சில தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்காமலும் சிலவற்றுக்கு அனுமதி கிடைத்தும் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அதற்கான தேவையும் இல்லை. மத்திய அரசு இன்னும் கூடுதலான தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இங்கு அனுமதி அளித்து, தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.“ என்றும் ராமாராவ் கூறினார். தனிப்பட்ட கருத்தாகச் சொல்வதாகக் குறிப்பிட்டு, “ விரைவாக இந்தியாவுக்குத் தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடிய பைசர், மாடெர்னா, சினோவாக் மற்றும் பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களை, மத்திய அரசு அணுகவேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.


உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!
பஞ்சாப் முதலிய சில மாநில அரசுகளுக்கு அயல்நாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக மருந்துவழங்க மறுத்ததைப் பற்றிப் பேசுகையில், “ அனைத்து மாநில அரசுகளின் தேவையையும் நம்பிக்கையையும் மத்திய அரசு கவனத்தில்கொள்ளும் என நம்புகிறேன். ஒவ்வொரு மாநில அரசும் தனியாக தடுப்பூசிக் கொள்கை வைத்துக்கொள்ள முடியாது. ஒரே நாட்டில் அனைவரும் இதில் இணைந்து செயல்படவேண்டும்.” என்றார் ராமாராவ். அடுத்தகட்டப் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்; தனித்தனியாகச் செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Nothing Phone 4b Vs 4a: இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
Embed widget