மேலும் அறிய

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார்.

உலக அளவில் தடுப்பூசி உற்பத்தியின் தலைநகரமாக இந்தியாவை மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசியது நினைவிருக்கலாம். இதைப்போல, உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக ஐதராபாத்தையும் கூறலாம். பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார். (இந்தியாவில் முதலில் அனுமதி அளிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில், உள்நாட்டுத் தயாரிப்பு கோவாக்சின் தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்பான இதை, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், உற்பத்திசெய்வதே தெரிந்ததே.)

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!

தகவல்தொழில்நுட்ப மாவட்டமான சைபராபாத்தில் கோவிட் சிகிச்சை மையத்தை புதனன்று தொடங்கிவைத்த அவர், “ உலகத்தின் தடுப்பூசி உற்பத்திக் கேந்திரமாக ஐதராபாத் இருக்கின்றபோதும், உள்ளூர் மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் நம்மிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.” என்றார் அமைச்சர் ராமராவ்.  மேலும், “நமக்கு போதுமான தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு நம்முடைய அரசாங்கம் பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்தமுடியும். ஒட்டுமொத்த மாநிலத்திலும் 45 நாள்களுக்குள் தடுப்பூசியைச் செலுத்தும் பணியை முடித்துவிடமுடியும். நம்முடைய தேவை அதிகமாக இருக்கிறது; நமக்கு தரப்படும் தடுப்பூசிகளின் அளவோ மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லாம் மத்திய அரசு செய்வதுதான்.” என்றும் கூறினார், ராமாராவ்.

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!
முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனான இவர்தான். தடுப்பூசி கொள்முதலுக்கான பணிக்குழுவின் பொறுப்பாளரும் ஆவார். ” உலகின் சில நாடுகளில் குறிப்பாக, கனடா, அமெரிக்கா, டென்மார்க் ஆகியவற்றில் தடுப்பூசிகள் தேவைக்கும் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். சில தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்காமலும் சிலவற்றுக்கு அனுமதி கிடைத்தும் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அதற்கான தேவையும் இல்லை. மத்திய அரசு இன்னும் கூடுதலான தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இங்கு அனுமதி அளித்து, தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.“ என்றும் ராமாராவ் கூறினார். தனிப்பட்ட கருத்தாகச் சொல்வதாகக் குறிப்பிட்டு, “ விரைவாக இந்தியாவுக்குத் தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடிய பைசர், மாடெர்னா, சினோவாக் மற்றும் பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களை, மத்திய அரசு அணுகவேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.


உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!
பஞ்சாப் முதலிய சில மாநில அரசுகளுக்கு அயல்நாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக மருந்துவழங்க மறுத்ததைப் பற்றிப் பேசுகையில், “ அனைத்து மாநில அரசுகளின் தேவையையும் நம்பிக்கையையும் மத்திய அரசு கவனத்தில்கொள்ளும் என நம்புகிறேன். ஒவ்வொரு மாநில அரசும் தனியாக தடுப்பூசிக் கொள்கை வைத்துக்கொள்ள முடியாது. ஒரே நாட்டில் அனைவரும் இதில் இணைந்து செயல்படவேண்டும்.” என்றார் ராமாராவ். அடுத்தகட்டப் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்; தனித்தனியாகச் செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்Tamilisai Pressmeet : ”சாதியை வைத்து அரசியலா? இனி சும்மா இருக்க மாட்டோம்” ஆவேசமான தமிழிசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; SRH தொடக்க வீரர்களை காலி செய்த பெங்களூரு!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
K.E.Gnanavel Raja:
K.E.Gnanavel Raja: "வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி" தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
Inheritance Tax: பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? ராஜீவ் காந்தி காலத்தில் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? ராஜீவ் காந்தி காலத்தில் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
Guru Peyarchi 2024 Palangal: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!
Guru Peyarchi 2024: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!
Embed widget