மேலும் அறிய

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார்.

உலக அளவில் தடுப்பூசி உற்பத்தியின் தலைநகரமாக இந்தியாவை மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசியது நினைவிருக்கலாம். இதைப்போல, உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக ஐதராபாத்தையும் கூறலாம். பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார். (இந்தியாவில் முதலில் அனுமதி அளிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில், உள்நாட்டுத் தயாரிப்பு கோவாக்சின் தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்பான இதை, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், உற்பத்திசெய்வதே தெரிந்ததே.)

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!

தகவல்தொழில்நுட்ப மாவட்டமான சைபராபாத்தில் கோவிட் சிகிச்சை மையத்தை புதனன்று தொடங்கிவைத்த அவர், “ உலகத்தின் தடுப்பூசி உற்பத்திக் கேந்திரமாக ஐதராபாத் இருக்கின்றபோதும், உள்ளூர் மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் நம்மிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.” என்றார் அமைச்சர் ராமராவ்.  மேலும், “நமக்கு போதுமான தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு நம்முடைய அரசாங்கம் பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்தமுடியும். ஒட்டுமொத்த மாநிலத்திலும் 45 நாள்களுக்குள் தடுப்பூசியைச் செலுத்தும் பணியை முடித்துவிடமுடியும். நம்முடைய தேவை அதிகமாக இருக்கிறது; நமக்கு தரப்படும் தடுப்பூசிகளின் அளவோ மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லாம் மத்திய அரசு செய்வதுதான்.” என்றும் கூறினார், ராமாராவ்.

உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!
முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனான இவர்தான். தடுப்பூசி கொள்முதலுக்கான பணிக்குழுவின் பொறுப்பாளரும் ஆவார். ” உலகின் சில நாடுகளில் குறிப்பாக, கனடா, அமெரிக்கா, டென்மார்க் ஆகியவற்றில் தடுப்பூசிகள் தேவைக்கும் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். சில தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்காமலும் சிலவற்றுக்கு அனுமதி கிடைத்தும் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அதற்கான தேவையும் இல்லை. மத்திய அரசு இன்னும் கூடுதலான தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இங்கு அனுமதி அளித்து, தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.“ என்றும் ராமாராவ் கூறினார். தனிப்பட்ட கருத்தாகச் சொல்வதாகக் குறிப்பிட்டு, “ விரைவாக இந்தியாவுக்குத் தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடிய பைசர், மாடெர்னா, சினோவாக் மற்றும் பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களை, மத்திய அரசு அணுகவேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.


உலகத்துக்கே தடுப்பூசி தரும் ஊரில் தடுப்பூசிக்கு வழியில்லை!
பஞ்சாப் முதலிய சில மாநில அரசுகளுக்கு அயல்நாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக மருந்துவழங்க மறுத்ததைப் பற்றிப் பேசுகையில், “ அனைத்து மாநில அரசுகளின் தேவையையும் நம்பிக்கையையும் மத்திய அரசு கவனத்தில்கொள்ளும் என நம்புகிறேன். ஒவ்வொரு மாநில அரசும் தனியாக தடுப்பூசிக் கொள்கை வைத்துக்கொள்ள முடியாது. ஒரே நாட்டில் அனைவரும் இதில் இணைந்து செயல்படவேண்டும்.” என்றார் ராமாராவ். அடுத்தகட்டப் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்; தனித்தனியாகச் செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

தலைப்பு செய்திகள்

ரயிலில் இந்த பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா? இனி ரூ.10,000 அபராதம் உறுதி!
ரயிலில் இந்த பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களா? இனி ரூ.10,000 அபராதம் உறுதி!
14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!
14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
Embed widget