மேலும் அறிய

உத்தராகண்ட் பனிச்சரிவு...10 பேர் உயிரிழப்பு...தமிழர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேறுபவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 34 மலையேறுபவர்கள் மற்றும் ஏழு பயிற்றுனர்கள் கொண்ட குழு, மலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது பனிச்சரிவில் சிக்கியதாக என்ஐஎம் முதல்வர் கர்னல் அமித் பிஷ்ட் தெரிவித்துள்ளார். மலைப்பகுதியில் பத்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தரகாசி பேரிடர் மேலாண்மை அலுவலர் தேவேந்திர பட்வால் கூறுகையில், "காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களில் எட்டு பேர் எங்களது குழு உறுப்பினர்களால் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்பு குழுவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மலையேறுபவர்கள், மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 18 பேரை காணவில்லை" என்றார்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தராகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் கங்கோத்ரி மலைத்தொடரில் இந்த சிகரம் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தராகண்ட் முதலமைச்சரிடம் பேசி நிலைமையை மதிப்பிட்டதாக தெரிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்குமாறு இந்திய விமான படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

உத்தரகாசியில் நேரு மலையேறும் நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் சிக்கியவர்களை மீட்க உடனடி மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உத்தரகண்ட் முதலமைச்சர் தாமி கூறியுள்ளார். "நேரு மலையேறும் நிறுவனத்தின் 28 பயிற்சியாளர்கள், உத்தரகாசி, திரௌபதியின் தண்டா-2 மலை உச்சியில் பனிச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிறகு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ராணுவத்தின் உதவியை வேண்டு கேட்டு கொண்டுள்ளோம். மேலும் மத்திய அரசு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைவரையும் காப்பாற்ற, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்!  யாருக்கு ஜாக்பார்ட்!  மோடி, அமித்ஷா போடும் கணக்கு
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்!  யாருக்கு ஜாக்பார்ட்!  மோடி, அமித்ஷா போடும் கணக்கு
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Property Tax: உங்க பெயரில் சொத்து வரி இருக்கான்னு தெரியுமா? தமிழ்நாட்டில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Property Tax: உங்க பெயரில் சொத்து வரி இருக்கான்னு தெரியுமா? தமிழ்நாட்டில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Sri Reddy : பிடிக்காத போதும் கவர்ச்சி காட்டுகிறேன்.. நயன்தாரா, த்ரிஷாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி
Sri Reddy : பிடிக்காத போதும் கவர்ச்சி காட்டுகிறேன்.. நயன்தாரா, த்ரிஷாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி
Embed widget