மேலும் அறிய

உத்தராகண்ட் பனிச்சரிவு...10 பேர் உயிரிழப்பு...தமிழர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேறுபவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 34 மலையேறுபவர்கள் மற்றும் ஏழு பயிற்றுனர்கள் கொண்ட குழு, மலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது பனிச்சரிவில் சிக்கியதாக என்ஐஎம் முதல்வர் கர்னல் அமித் பிஷ்ட் தெரிவித்துள்ளார். மலைப்பகுதியில் பத்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தரகாசி பேரிடர் மேலாண்மை அலுவலர் தேவேந்திர பட்வால் கூறுகையில், "காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களில் எட்டு பேர் எங்களது குழு உறுப்பினர்களால் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்பு குழுவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மலையேறுபவர்கள், மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 18 பேரை காணவில்லை" என்றார்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தராகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் கங்கோத்ரி மலைத்தொடரில் இந்த சிகரம் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தராகண்ட் முதலமைச்சரிடம் பேசி நிலைமையை மதிப்பிட்டதாக தெரிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்குமாறு இந்திய விமான படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

உத்தரகாசியில் நேரு மலையேறும் நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் சிக்கியவர்களை மீட்க உடனடி மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உத்தரகண்ட் முதலமைச்சர் தாமி கூறியுள்ளார். "நேரு மலையேறும் நிறுவனத்தின் 28 பயிற்சியாளர்கள், உத்தரகாசி, திரௌபதியின் தண்டா-2 மலை உச்சியில் பனிச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிறகு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ராணுவத்தின் உதவியை வேண்டு கேட்டு கொண்டுள்ளோம். மேலும் மத்திய அரசு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைவரையும் காப்பாற்ற, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.