மேலும் அறிய

உத்தராகண்ட் பனிச்சரிவு...10 பேர் உயிரிழப்பு...தமிழர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேறுபவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 34 மலையேறுபவர்கள் மற்றும் ஏழு பயிற்றுனர்கள் கொண்ட குழு, மலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது பனிச்சரிவில் சிக்கியதாக என்ஐஎம் முதல்வர் கர்னல் அமித் பிஷ்ட் தெரிவித்துள்ளார். மலைப்பகுதியில் பத்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தரகாசி பேரிடர் மேலாண்மை அலுவலர் தேவேந்திர பட்வால் கூறுகையில், "காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களில் எட்டு பேர் எங்களது குழு உறுப்பினர்களால் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்பு குழுவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மலையேறுபவர்கள், மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 18 பேரை காணவில்லை" என்றார்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தராகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் கங்கோத்ரி மலைத்தொடரில் இந்த சிகரம் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தராகண்ட் முதலமைச்சரிடம் பேசி நிலைமையை மதிப்பிட்டதாக தெரிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்குமாறு இந்திய விமான படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

உத்தரகாசியில் நேரு மலையேறும் நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் சிக்கியவர்களை மீட்க உடனடி மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உத்தரகண்ட் முதலமைச்சர் தாமி கூறியுள்ளார். "நேரு மலையேறும் நிறுவனத்தின் 28 பயிற்சியாளர்கள், உத்தரகாசி, திரௌபதியின் தண்டா-2 மலை உச்சியில் பனிச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிறகு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ராணுவத்தின் உதவியை வேண்டு கேட்டு கொண்டுள்ளோம். மேலும் மத்திய அரசு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைவரையும் காப்பாற்ற, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget