மேலும் அறிய

விசித்திரம்...பெண்ணுறுப்புடன் பிறந்த ஆண்... 30 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றம்..! அது எப்படி...?

30 ஆண்டுகளாக பெண்ணுறுப்புடன் வாழ்ந்த ஆணுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணுறுப்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது.

காலங்கள் போக போக மருத்துவத்துறை பல உச்சபட்ச வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் அதற்கே சவால் விடும் வகையிலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக குழந்தைகள் வித்தியாசமானதாக பிறக்கின்றன. அதன்படி, இரட்டை குழந்தைகள், இரண்டு தலையுடன் கூடிய குழந்தைகள், கொம்புடன் பிறக்கும் குழந்தைகள், முகச்சிதைவு குழந்தைகள் என பல விசித்திர தோற்றத்துடன் குழந்தைகள் பிறந்து வருகின்றன. என்னதான் புதிய புதிய மருந்துகள் கண்டுபிடித்தாலும், குழந்தைகள் பிறக்கும் போதே அரிதாக பிறந்துதான் வருகின்றனர். அப்படி தான் இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆண்

உத்தர பிரதேச மாநிலத்தில் ஃபரிதாபாத் நகரம் அமைந்துள்ளது. இங்கு விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் அந்த ஆண் குழந்தைக்கு பெண்களுக்கு மட்டும் இருக்கும் கருப்பை மற்றும் ஃபலோபியன் (Fallopian) குழாய்கள் இருந்துள்ளன. அந்த குழந்தைக்கு ஆண் மற்றும் பெண் இருவரின் பிறப்புறுப்புகளும் இருந்துள்ளன. 

இப்படி பிறந்த அந்த குழந்தைக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பிரச்சனையோடு அவர் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். தற்போது அவருக்கு 30 வயது. இப்படி இரு பாலரின் பிறப்புறுப்புகள் இருப்பதால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவர்களிடம் கவுன்சிலிங் சென்று இந்த பாதிப்புக்கு ஒரு முடிவு எடுத்தார். 

மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு  முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் (persistent mallerian duct syndrome) என்ற ஒரு அரிய மரபணு நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.  இது மிக மிக அரியவகை நோயாகும். உலகெங்கிலும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   பெண்களுக்கு மட்டும் இருக்கக் கூடிய ஃபலோபியன் குழாய்கள், கருப்பையுடம் 30 வயது வரை இவர் இருந்துள்ளார். 

 அறுவை சிகிச்சை

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  குழந்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சை (கீஹோல்) செய்யப்பட்டது.  ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு வெற்றிகரமாக ஃபலோபியன் குழாய்கள், கருப்பை அகற்றப்பட்டன.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதன் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண் உடலில் பெண் உறுப்புகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Afghanistan Earthquake : துரத்தும் துயரம்.. ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கம்.. நள்ளிரவில் அலறியடித்து மக்கள் ஓட்டம்..

Zombie Drug: மனிதர்களை ஜோம்பி ஆக்கும் போதைப்பொருள்! வீதிகளில் சுற்றித்திரியும் அவலம்..இப்படியெல்லாம் பாதிப்பா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget