மேலும் அறிய

Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌

அண்ணா பல்கலைக்கழகத்தினைப்‌ பொறுத்தவரை அனைத்து மாணவர்களின்‌ பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்‌ புகாரின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்று பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர்‌. பிரகாஷ்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவி ஒருவர்‌, ராஜா அண்ணாமலைபுரம்‌ அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ ஒன்றை அளித்துள்ளார்‌.

மேற்படி புகாரில்‌, மாணவி தனது ஆண்‌ நண்பருடன்‌ கல்லூரி வளாகத்தின்‌ பின்புறம்‌ பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம்‌ தெரியாத நபர்கள்‌ இருவரையும்‌ அச்சுறுத்தியதாகவும்‌ பின்னர்‌ அதே நபர்கள் தன்னுடைய நண்பரைத் தாக்கிவிட்டு தன்னை பாலியல்‌ சீண்டலுக்கு முயன்றதாக மாணவி காவல்‌ நிலையத்தில்‌ 24.12.2024 அன்று புகார்‌ தெரிவித்துள்ளார்‌.

காவல்துறை தீவிர விசாரணை

இந்த புகாரின்‌ பேரில்‌ காவல்துறையினர்‌ உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்‌. கோட்டூர்புரம்‌ காவல்‌ நிலைய உதவி ஆணையர்‌ தலைமையில்‌, ஆர்‌.ஏ.புரம்‌ மகளிர்‌ காவல்‌ நிலையக்‌ குழுவினருடன்‌ வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்‌.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள்‌ புகார்க்‌ குழுவினருக்கும்‌ தற்போது தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, குழுவின்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்‌டு வருகிறது.

காவல் துறையினரின்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை உயர்‌ அலுவலர்கள்‌ அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்‌. அதன் அடிப்படையில்‌ பல்கலைக்கழக நிர்வாகம்‌ காவல் துறையினரின்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில்‌ பாதுகாப்பு பணியாளர்கள்‌ எப்போதும்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. கண்காணிப்பு கேமராக்களும்‌ பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும்‌, இந்த விரும்பத்தகாத சம்பவம்‌ நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம்‌ மீண்டும்‌ நிகழாமல்‌ இருக்க பல்கலைக்கழக அளவில்‌ மேற்கொள்ள வேண்டிய கூடுதல்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌.

மாணவர்களின்‌ பாதுகாப்பே முன்னுரிமை

அண்ணா பல்கலைக்கழகத்தினைப்‌ பொறுத்தவரை அனைத்து மாணவர்களின்‌ பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌. குற்றவாளிகளை விரைவில்‌ கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள்‌ உறுதியளித்துள்ளனர்‌’’.

இவ்வாறு சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்‌.

இதையும் வாசிக்கலாம்: தமிழ்நாட்டிலும் நிர்பயா? தலைநகரின் பெருமைமிகு அண்ணா பல்கலை.யில் பாலியல் அவலம்- கொந்தளித்த ஈபிஎஸ்! 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Embed widget