மேலும் அறிய

Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌

அண்ணா பல்கலைக்கழகத்தினைப்‌ பொறுத்தவரை அனைத்து மாணவர்களின்‌ பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்‌ புகாரின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்று பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர்‌. பிரகாஷ்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவி ஒருவர்‌, ராஜா அண்ணாமலைபுரம்‌ அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ ஒன்றை அளித்துள்ளார்‌.

மேற்படி புகாரில்‌, மாணவி தனது ஆண்‌ நண்பருடன்‌ கல்லூரி வளாகத்தின்‌ பின்புறம்‌ பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம்‌ தெரியாத நபர்கள்‌ இருவரையும்‌ அச்சுறுத்தியதாகவும்‌ பின்னர்‌ அதே நபர்கள் தன்னுடைய நண்பரைத் தாக்கிவிட்டு தன்னை பாலியல்‌ சீண்டலுக்கு முயன்றதாக மாணவி காவல்‌ நிலையத்தில்‌ 24.12.2024 அன்று புகார்‌ தெரிவித்துள்ளார்‌.

காவல்துறை தீவிர விசாரணை

இந்த புகாரின்‌ பேரில்‌ காவல்துறையினர்‌ உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்‌. கோட்டூர்புரம்‌ காவல்‌ நிலைய உதவி ஆணையர்‌ தலைமையில்‌, ஆர்‌.ஏ.புரம்‌ மகளிர்‌ காவல்‌ நிலையக்‌ குழுவினருடன்‌ வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்‌.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள்‌ புகார்க்‌ குழுவினருக்கும்‌ தற்போது தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, குழுவின்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்‌டு வருகிறது.

காவல் துறையினரின்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை உயர்‌ அலுவலர்கள்‌ அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்‌. அதன் அடிப்படையில்‌ பல்கலைக்கழக நிர்வாகம்‌ காவல் துறையினரின்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில்‌ பாதுகாப்பு பணியாளர்கள்‌ எப்போதும்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. கண்காணிப்பு கேமராக்களும்‌ பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும்‌, இந்த விரும்பத்தகாத சம்பவம்‌ நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம்‌ மீண்டும்‌ நிகழாமல்‌ இருக்க பல்கலைக்கழக அளவில்‌ மேற்கொள்ள வேண்டிய கூடுதல்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌.

மாணவர்களின்‌ பாதுகாப்பே முன்னுரிமை

அண்ணா பல்கலைக்கழகத்தினைப்‌ பொறுத்தவரை அனைத்து மாணவர்களின்‌ பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌. குற்றவாளிகளை விரைவில்‌ கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள்‌ உறுதியளித்துள்ளனர்‌’’.

இவ்வாறு சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்‌.

இதையும் வாசிக்கலாம்: தமிழ்நாட்டிலும் நிர்பயா? தலைநகரின் பெருமைமிகு அண்ணா பல்கலை.யில் பாலியல் அவலம்- கொந்தளித்த ஈபிஎஸ்! 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
"TET தேர்வு அறையில் கலெக்டர் ஸ்ரீகாந்த்: மயிலாடுதுறையில் இன்று நடந்தது என்ன?"
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
Embed widget