மேலும் அறிய

வெளிநாடு வாழ் இந்தியர்களும் UPI மூலம் பணம் செலுத்தமுடியும்...விரைவில் அமலுக்கு வரும் திட்டம்...!

முதற்கட்டமாக, 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI சேவைகளை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. 

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களை பயன்படுத்தி விரைவில் UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற உள்ளனர்.

முதற்கட்டமாக, 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI சேவைகளை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. 

அவர்கள், தங்களின் இந்திய மொபைல் எண்களை சாராமலேயே UPI சேவையை பெறலாம். சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது.

இது தொடர்பாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, "சர்வதேச எண்களை பயன்படுத்தி என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்குகளை திறந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என வங்கிகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஆர்இ வங்கி கணக்கு என்பது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் வருமானத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு. என்ஆர்ஓ வங்கி கணக்கு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்காகும்.

UPI சேவையை வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்படுத்த ஒரே நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்படி கணக்குகள் முறையாக உள்ளதா என அந்தந்த வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில், பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  

RuPay டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2,600 கோடி ரூபாய் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள், வெளிவாடுகளில் வாழும் குடும்பங்கள், உள்ளூர் வர்த்தகத்திற்கு மத்திய அரசின் இந்த முடிவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், RuPay மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.

 

கடந்த 6 ஆண்டுகளில், UPI மூலம் நடந்த பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget