மேலும் அறிய

தண்ணீர் பானையை தொட்டதால் சிறுவன் கொலையா? 7 மருத்துவமனைகள் சென்றும் பலனில்லை - அன்று நடந்தது என்ன?

இறுதிச்சடங்கை உடனடியாக முடிக்கும் படி அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக சிறுவனின் மாமா குற்றம் சாட்டியுள்ளார்.

சாதிய தீண்டாமை ஒழிக்க புத்தகங்களில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் கூட இன்றும் பள்ளிகளில் தீண்டாமை என்பது தலைவிரித்தாடுகிறது. அதற்கு சான்றாக அவ்வபோது வெளியாகும் குற்றச்சம்பவங்கள் இருக்கின்றன. அப்படியான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.


தீண்டாமையால் பறிபோன உயிர்:

ஜூலை 20 அன்று, ராஜஸ்தானின் ஜலோரில் உள்ள பள்ளி ஒன்றில் உயர் சாதியினர் மற்றும் தாழ்ந்த சாதியினர் என இரு பிரிவுகளின் அடிப்படையில் குடிநீர் குடம் வைக்கப்பட்டிருக்கிறது.  உயர் வகுப்பு மாணவர்களுக்காக வைக்கப்பட்ட குடத்தில்  3 ஆம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது தலித் சிறுவன் தண்ணீர் குடித்திருக்கிறார்.இதனை கண்ட தலைமை ஆசிரியர் ஷைல் சிங் தலித் சிறுவனை கொடூரமாக அடித்திருக்கிறார். இதனால் காது, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் சிறுவனம் அசைவற்று கிடந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து மாலை 4 மணியளவில் சிறுவனின் மாமாவிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஜோத்பூரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுரானா கிராமத்தில் இருந்து விரைந்திருக்கிறார்.சிறுவன் அப்போது வரையிலும் அசைவற்று கிடந்த நிலையில் , அவரது மாமா உள்ளூரில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கு அடுத்தடுத்து தூக்கி சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கை விரித்துள்ளனர். இதனால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கும் சிகிச்சை பலனளிக்காததால்  ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 


தண்ணீர் பானையை தொட்டதால் சிறுவன் கொலையா? 7 மருத்துவமனைகள் சென்றும் பலனில்லை - அன்று நடந்தது என்ன?

இறுதிச்சடங்கை விரைந்து நடத்த கட்டாயம் :

கடந்த 15 நாட்களில் 5 நகரங்களில் உள்ள  ஏழு மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் சிறுவன் உயிர்பிழைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் இறுதிச்சடங்கை நடத்த உறவினர்களின் வருகைக்காக குடும்பத்தினர் காத்திருந்ததாகவும் , ஆனால்  இறுதிச்சடங்கை உடனடியாக முடிக்கும் படி அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக சிறுவனின் மாமா குற்றம் சாட்டியுள்ளார். மேலும்  அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


தண்ணீர் பானையை தொட்டதால் சிறுவன் கொலையா? 7 மருத்துவமனைகள் சென்றும் பலனில்லை - அன்று நடந்தது என்ன?

பள்ளி தரப்பு விளக்கம் :

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் இந்த சம்பத்தில் தலைமை ஆசிரியரின் தவறு இருக்கிறது. ஆனாலும் இதில் சாதிய தலையீடு என்பது முற்றிலும் பொய். சிறுவர்கள் இருவரும் புத்தகத்திற்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் இங்குள்ள பொதுவான தண்ணீர் தொட்டியில்தான் அனைத்து சிறுவர்களையும் தண்ணீர் குடிக்க அனுமதிக்கிறோம். இங்கு உயர்ந்த சமூகத்திற்கு ஒரு குடம் , தாழ்ந்த சமூகத்திற்கு ஒரு குடம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை ஆசிரியர் இருவரையுமேதான் அடித்தார் “ என தெரிவித்துள்ளனர்.ஆனால் அந்த தண்ணீர் தொட்டியில் தற்போதுதான் சிமெண்ட் வைத்து பூசப்பட்டிருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். 

இழப்பீடு :

தற்போது உயிரிழந்த சிறுவனுக்கு 20 லட்சம் இழப்பீடு தொகை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவனின் இரண்டு சகோதரர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Embed widget