மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Todays News Headlines: போலியோ சொட்டு மருந்து.. உக்ரைன் போர்.. டி20 தொடர் வெற்றி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
![Todays News Headlines: போலியோ சொட்டு மருந்து.. உக்ரைன் போர்.. டி20 தொடர் வெற்றி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்! Todays News Headlines in Tamil Nadu, India 27 February Top News Today Morning headlines news in Tamil Todays News Headlines: போலியோ சொட்டு மருந்து.. உக்ரைன் போர்.. டி20 தொடர் வெற்றி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/bcd0885c5bb94ae04fcdd5f62c497443_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
- விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உரையாடினார்.
- திருவல்லிக்கேனி பார்த்தசாரி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லி பயணம் செய்துள்ளார்.
- தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை ஆய்வில் தகவல்.
- தனியார் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு; வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியா:
- உக்ரைனில் இருக்கும் அனைத்தும் இந்தியர்களும் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதி.
- உக்ரைன் போர் காரணமாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- டெல்லியில் சொந்த காரில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை.
- பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
உலகம்:
- உக்ரைனை அனைத்து வகைகளிலும் தாக்க ரஷ்யா அரசு உத்தரவிட்டுள்ளது.
- உக்ரைன் தலைநகர் உட்பட பல இடங்களில் ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் செய்து வருகிறது.
- உக்ரைனிலிருந்து 250 பேருடன் இரண்டாவது இந்திய விமானம் இன்று காலை டெல்லி வந்தது.
- ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனிற்கு ஜெர்மனி ஆயுதம் வழங்கியுள்ளது.
- ரஷ்ய தாக்குதலால் உக்ரைனிலிருந்து 1.20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல்.
விளையாட்டு:
- இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
- இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி இன்று மாலை தர்மசாலாவில் நடைபெறுகிறது.
- மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஒலிம்பிக்
உலகம்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion